தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.
மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை எண்ணூர் துறைமுகம் மற்றும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் பீரியட் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. படம் மொத்தமும் வரும் 2024ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
