சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிய இவர் அதன் பின்னர் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலமானார்.
தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காககாத்துக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான ஆடையில் லேட்டஸ்ட்டாக எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு “எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெய்க்கின்றார். என்ற தத்துவத்தை குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram

