தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இதுவரை பாக்கியா ராதிகா என இருவருக்கும் தெரியாமல் நாடகம் ஆடி வந்த கோபி தற்போது கையும் களவுமாக சிக்கி உள்ளார்.
பாக்கியா கோபியை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கோபி வீடியோ வார்த்தை வெளியிட்டு அடுத்த ஒரு வாரம் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து பேசி உள்ளார். காதலுக்காக நிறைய பொய், பித்தலாட்டம் பண்ணிட்டான். அடுத்த ஒரு வாரம் குற்றவாளியா கூண்டுல ஏற்றப்பட்ட கிளி போலத்தான் இருக்கணும்.
என்ன பண்றது வயசான லவ் பண்ண கூடாதுன்னு சட்டம் எல்லாம் இருக்குது என கூறுகிறார். மேலும் தனக்கு மெசேஜ் செய்து நடிப்பை பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
#Gopi #Baakiyalakshmi pic.twitter.com/3DifonWuHy
— Parthiban A (@ParthibanAPN) July 9, 2022

