மோசடியில் சிக்கி புலம்பி உள்ளார் மா.கா.பா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் மா.கா.பா.இவரை தெரியாதவர் இருக்க முடியாது .இந்த நிலையில் தற்போது இவருக்கு மோசடி நடந்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதாவது மாகாபா ஆனந்த் அவருடைய காருக்கு பிரபல பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் போட்டுள்ளார் அதில் தண்ணீர் கலந்த மோசடி செய்துள்ளதால் அவரது கார் ரிப்பேர் ஆகி அதற்கு மூன்று லட்சம் செலவு செய்திருப்பதாக பில் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தண்ணீர் கலந்த டீசல் போட்டதனால் அதற்கு ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று மாகாபா சொல்லி எதனால் அவர்கள் அதற்கு பதிலாக பேரம் பேசுவதாக கூறியிருக்கிறார். காருக்கு மூன்று லட்சம் செலவாய் இருக்கு ஆனா அவங்க 80,000 கொடுக்கிறேன் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு போகாதீங்கன்னு சொல்றாங்க என்று சொல்லி இருக்கிறார்.
இப்ப நான் என்ன செய்யறதுன்னு தெரியல என்று வீடியோவை வெளியிட்டு உள்ளார்.. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


