தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாகவும் வளம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனால் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனியே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மலேசியா மற்றும் லங்காவி தீவில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பைக் போட்டை ஓட்டும் போது விஜய் ஆண்டனி அவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவருக்கு முகம் மற்றும் உடம்பில் பலமான காயங்கள் ஏற்பட்டு பற்கள் உடைந்து சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். அவரை படகுழுவினர் லங்காவியல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அதன் பிறகு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி சமீபத்தில் உடல் நலம் தேறியுள்ளதாக தனது புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் தற்போது மீண்டும் தனது உடல் நலம் குறித்து மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன், என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் அதில் வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்
அன்புக்கு நன்றி” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை தந்து வைரலாகி வருகிறது.
அன்பு இதயங்களே
நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்????
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்????
அன்புக்கு நன்றி— vijayantony (@vijayantony) February 2, 2023

