நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது சகோதரி நண்பர் மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஹிந்தி நடிகர் சுஷாந்த்தின் சிங்கின் வங்கி கணக்கில் ரூபாய் 15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டதாக அவரது தந்தை கே.கே சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில் சுஷாந்த்தின் தோழி ரியா சக்கரவர்த்தி, அவரது தாயார் சந்தியா சக்கரவர்த்தி, சகோதரர் ஜோவிக், சுஷாந்த்தின் மேலாளர் மிராண்டா, ஸ்ருதி மோடி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டு எனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்தார்.
இந்த பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறையினர் ரியா சக்கரவர்த்தியிடம் திங்கள்கிழமை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சுஷாந்த்தின் மூத்த சகோதரி மீட்டு சிங், சித்தார்த் , வர்த்தக மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோரிடம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். சுஷாந்த்தின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியது இதுவே முதல் முறை.
இதற்கிடையே சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரவர்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக பீகார் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் மூன்று நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…