கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் யஷ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கேஜிஎப். இந்த படத்தை Hombale பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து இந்நிறுவனம் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து உருவாகியுள்ள இப்படத்தை தயாரிக்க இருப்பதாக வெளியாகியுள்ள அறிவிப்பு மூலம் உறுதியாகி உள்ளது.
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறோம். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மிக பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சுதா கொங்கரா சூர்யாவிடம் உண்மை கதையை மையமாக கொண்டு ஒரு கதை கூறி இருப்பதாக தகவல் பரவிய நிலையில் அது இந்தப் படமாகத்தான் இருக்கும் என தெரியவந்துள்ளது.
படத்தின் நாயகன் சூர்யா இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
???????????????? ???????????????? ???????????????????????????? ???????????????????????????? ???????? ???????? ????????????????, ???????????? ???????????????? ????????????????????.
To a new beginning with a riveting story @Sudha_Kongara, based on true events.@VKiragandur @hombalefilms @HombaleGroup pic.twitter.com/mFwiGOEZ0K
— Hombale Films (@hombalefilms) April 21, 2022