Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் பேச்சால் கதறி அழுத சூர்யா.. காரணம் என்ன தெரியுமா ?வைரலாகும் தகவல்..

suriya-in-saddest-moment-in-cinema life

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இப்படி தேசிய விருதுவரை சென்று உள்ள சூர்யா ஆரம்பத்தில் இயக்குனர் சொன்ன வார்த்தையால் கூனிக்குறுகி கதறி அழுத்துள்ளார்.

சூர்யா முதல் முறையாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர். நடிப்பு சுத்தமாக வராத காரணத்தினால் சூர்யாவின் மீது மொத்த பட குழுவும் கடுப்பிலிருந்து உள்ளது. கொல்கத்தாவில் ஷூட்டிங் நடந்த போது லஞ்ச் பிரேக்கில் சூர்யா இயக்குனர் வசந்திடம் பேசிக்கொண்டிருக்கும் போது கொல்கத்தா பிரியாணி சூப்பர் என கூறியுள்ளார். இதனைக் கேட்ட இயக்குனர் அப்படியா ராசா நல்லா சாப்பிடுங்க என கூறியுள்ளார்.

இயக்குனர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு கூனி குறுகி தலையணை நனையும் அளவுக்கு கதறி அழுததாக நடிகர் சூர்யா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 suriya-in-saddest-moment-in-cinema life

suriya-in-saddest-moment-in-cinema life