இந்திய சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சையில் இருந்து வந்த SPB உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென மீண்டும் பின்னடைவை சந்தித்து இன்று மதியம் ஒரு மணியளவில் உயிரிழந்தார்.
இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிம்புவும் அறிக்கை ஒன்றின் மூலமாக தன்னுடைய இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் எத்தனை ஆயிரம் பாடல்கள்.. பாடிக் கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் மன்னன்.
சாதாரணமான பாடகர்கள் எஸ் பி பி யின் பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
என் குடும்பத்தில் அவருடைய நிகழ்வுகள் என்றும் மறையாது. பாடும் நிலாவே பாடலுக்கு என்னப்பா கம்போஸ் செய்ய எஸ்பிபி பாட வந்தார்.
குட்டிப்பையன் நான் ரெக்கார்டிங் பன்ன உட்கார்ந்து இருந்தேன் வேற யாராவது இருந்தால் பாட மாட்டேன் என கூறி இருப்பார்கள் ஆனால் எஸ்பிபி பாடினார். இன்றுவரை அது என்னால் மறக்கவே முடியாது.
அதேபோல் என்னுடைய முதல் படமான காதல் அழிவதில்லை படத்தில் இவன்தான் நாயகன் என்ற பாடலை எஸ்பிபி தான் பாடிக் கொடுத்தார்.
முதன்முதலில் இவன்தான் நாயகன் என எனக்காக உச்சரித்த குரல். இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேல் பாலு சார் என தெரிவித்துள்ளார்.
மேலும் எஸ்பிபி யாரையும் காயப்படுத்த மாட்டார் தவறாக புரிந்து கொண்டால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவார் அப்படி குழந்தை மனம் கொண்டவர்.
இப்போது உங்களுக்கு விடை கொடுத்து மீண்டும் இந்த மண்ணில் உங்களை வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே.. லவ் யூ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…