Shot in a Place Not on the Map! – Ramya Pandian
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னைவில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரம்யா பாண்டியன், “சில காலத்திற்கு கிராமத்து கதைகளில் நடிக்க வேண்டாம் என்ற மனநிலையில்தான் இருந்தேன். ஆனால் இயக்குநரின் மீது இருந்த நம்பிக்கையால் இந்தக் கதையை கேட்டேன். முழுக் கதையையும் கேட்ட பிறகு, அதன் மையக் கருத்து மிகவும் பிடித்ததால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்” என்றார்.
மேலும், “இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த இடம் வரைபடத்தில்கூட இல்லாத ஒரு பகுதி. அங்கு தொலைதொடர்பு வசதிகளே இல்லை. தூங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ போதுமான வசதிகளும் இல்லை. ஆனால் அந்த இடத்திலும் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு செல்வது மிகவும் சவாலாக இருந்தாலும், அங்குள்ள மக்களுடன் பழகி, அவர்களுடன் இணைந்து வாழ்ந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. அந்தப் படப்பிடிப்பு எங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது,” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…
‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன்…
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த பழம்பெரும் நடிகை…
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G