“இந்தக் காலத்தில் ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடியவில்லை!” – ராதிகா சரத்குமார்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் கடந்த 14-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், “இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து, அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது குறைந்து வருகிறது. ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழுவினர் அன்பு, பாசம் மற்றும் ஒரே சிந்தனையுடன் கதையை நிதானமாகச் சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதைப் பற்றி பேசும்போதும், கேட்கும்போதும் பெருமையாக இருக்கிறது” என்றார்.

மேலும், இயக்குநர் வெங்கி அட்லூரி கதையை காட்சிக்கு காட்சி விவரித்தபோது, “இந்தக் காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?” என தான் கேட்டதாகக் கூறினார். பின்னர் கதாநாயகி தேர்வு குறித்து பேசிய ராதிகா, மமிதா பைஜுவை பார்த்தவுடன் அவர் இப்படத்திற்கு பொருத்தமானவர் என மகிழ்ந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து கமல்ஹாசனை சந்தித்துப் பேசியது குறித்தும் குறிப்பிட்ட ராதிகா, “புத்திசாலித்தனமாக எழுதுவது எப்படி என்பது குறித்து பயிற்சியும், விவாதமும் நடத்தப்பட வேண்டும்” என அவர் கூறியதாக தெரிவித்தார்.

“சினிமாவில் ஒவ்வொரு கதைக்கும் பின்னாலும் ஒரு குடும்பம் இருக்கும். அந்தக் குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். சில படங்களில் அந்தப் பந்தம் முழுமையாக வெளிப்படும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் ‘விஸ்வநாத் & சன்ஸ்’” என்றும் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

Suresh

Recent Posts

47 வயதில் முதல் ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்திய நடிகை ஜோதிகா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…

40 minutes ago

“ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்!” – தமன்னா வேதனை

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…

46 minutes ago

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்!” – மன்சூர் அலிகான்

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன்…

55 minutes ago

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த பழம்பெரும் நடிகை…

1 hour ago

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

2 days ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

2 days ago