பாக்கியா கேட்ட கேள்வி, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நித்திஷ் பற்றிய உண்மை பாக்யாவிற்கு தெரிய வர, சுதாகர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க நித்திஷ் நடந்து கொண்டிருந்த விஷயத்தை யோசித்துப் பார்க்கிறார் உடனே கொஞ்ச நேரத்தில் பாக்யா போன் போட்டு நம்ம விசாரிச்சா ஹோட்டலில் இருந்து வர சொல்லி இருக்காங்க இனியா என்று சொல்ல கண்டிப்பாக ஏதாவது முக்கியமான விஷயத்தை தான் இருக்கும் என்று சொல்லுகிறார் பாக்யா ரிஜெக்ட் பண்ண மாட்டாங்களா என்று சொல்ல நீ ஏம்மா அப்படி நினைக்கிற அப்படி எல்லாம் எதுவும் நினைக்காத நல்ல விஷயமாக தான் இருக்கும் நீ போயிட்டு வா என்று சொல்லி போனை வைக்கிறார். பிறகு உடனே கோபிக்கு போன் போட்டு நான் உங்களை பாக்கணும் டாடி கொஞ்சம் பேசணும் ஆபீஸ் வரைக்கும் வரீங்களா என்று கூப்பிட கோபி வரேன் என்று சொல்லுகிறார்.

கொஞ்ச நேரத்தில் கோபி வேலையை முடித்துவிட்டு ஆபீசுக்கு வர இனிய கேண்டினில் வெயிட் பண்ணுங்க என சொல்ல கோபி கேண்டினில் காத்திருக்கிறார் இனியா வந்து முன்னெல்லாம் நீ கூப்பிட்டால் ரொம்ப சந்தோஷமா இருப்ப ஆனா எப்ப நீ கூப்பிடும் போது என்ன சொல்ல போறியோனு வருத்தமா இருக்கு என்று சொல்ல இனியா இன்னைக்கும் நீங்க வருத்தப்படுற மாதிரி தான் டாடி நான் சொல்லப்போறேன் என்று சொல்லுகிறார். என்னாச்சு இனியா என்று கேட்க என் வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல டாடி அங்கிள் எல்லாம் சரியாயிடும்னு சொன்னாரு ஆனா நிதிஷ் திருப்பியும் போதை பொருள் எடுத்துக் கொண்டு தான் இருக்காரு இது மட்டும் இல்லாம அவங்க யாருமே நல்லவங்க இல்ல டாடி.

எல்லாருமே ஏமாத்துறவங்களா இருக்காங்க ஒருத்தர்கிட்ட கூட உண்மை இல்ல அவங்க பேசுனது நான் கேட்டேன் அம்மாவோட ரெஸ்டாரன்ட் காக தான் இந்த கல்யாணத்தை பண்ணி இருக்காங்க என்று சுதாகர் சந்திரிகா பேசியதை கோபியிடம் சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் பாக்கியா ஹோட்டலில் இன்டர்வியூக்கு செல்ல அங்கு சில டிரக்ஸ் எடுத்துவிட்டு அலப்பறை செய்கின்றனர். உடனே இன்டர்வியூக்கு சென்ற பாக்யாவை ஓனர் கேள்வி கேட்டு கொண்டு இருக்க பிறகு கொஞ்ச நேரத்தில் வெளியே வெயிட் பண்ணுங்க சொல்றேன் என சொல்லி இருக்கிறார். பாக்கியா வெளியில் வந்து நிற்க போலீசு வருவதைப் பார்த்து என்ன ஆச்சு என்று கேட்கிறார் அங்கு வேலை செய்யும் பெண் ரொம்ப அமர்க்களம் பண்றாங்க அதனாலதான் போலீஸ் வந்து இருக்காங்க என்று சொல்ல போலீஸ் அவர்களே அழைத்துச் செல்கிறது பிரஸ் மீடியா என அனைவரும் வர நிதிஷ் அந்த கும்பலில் இருக்கிறார் முதலில் பாக்கியா கவனிக்காமல் இருக்க பிறகு நித்திஷை கவனித்து விட்டு அதிர்ச்சி அடைகிறார்.

உடனே பின்னாலேயே போய் என்ன நிதிஷ் இதெல்லாம் என்னப்பா இது என்று கேட்க நிதிஷ் எதுவும் பேசாமல் இருக்க போலீஸ் உங்களுக்கு தெரிந்தவரா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் உங்க பையனா என்று சொல்ல இல்லை என்னோட பொண்ணோட வீட்டுக்காரர் என்று சொல்ல உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்குறதுக்கு வேற பையனே கிடைக்கலையா என்று சொல்லிவிட்டு அழைத்துச் சென்று விடுகின்றனர் உடனே பாக்யா அதிர்ச்சியில் என்ன செய்வது என புரியாமல் நிற்க, சார் உங்களை உள்ள கூப்பிடுறாரு வாங்க என சொல்லியும் பாக்கியா எதுவும் பேசாமல் சுதாகருக்கு ஃபோன் போட்டு நிதிஷ் கைதான விஷயத்தை சொல்ல சுதாகர் அதிர்ச்சி அடைகிறார்

அப்படியெல்லாம் இருக்காது ஏதாவது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்கும் இன்னும் அரை மணி நேரத்துல நித்திஷ் வீட்டுக்கு வந்துருவான் என போனை வைக்கிறார். உடனே பாக்யா இதை யார் கிட்ட சொல்றதுன்னு தெரியலையே என நினைக்கிறார். கோபி இனியாவிடம் கல்யாண வாழ்க்கையில் நான் தப்பு பண்ணிட்டேன் இனியா என்று பேசிக் கொண்டிருக்க பாக்யா இனியாவோட அப்பாவுக்கு போன் பண்ணி பேசலாம் என பண்ணுகிறார் என்ன விஷயம் பாக்கியம் என்று கேட்க எங்க இருக்கீங்க என்று கேட்க, இனியா கிட்ட பேசிகிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார்.

ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லையென்று சொல்ல இனியா கிட்ட போன் குடுங்க என்று சொல்லுகிறார் பிறகு இனியாவிடம் என்ன பேசுகிறார்?சுதாகர் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 01-07-25
jothika lakshu

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

2 days ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

2 days ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

2 days ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

2 days ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

2 days ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

2 days ago