Ananya Pandey about Vijay devarakonda
தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவை விமர்சித்ததாக அவரது ரசிகர்கள் இளம் நடிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல இளம் நடிகை அனன்யா பாண்டே. இவர் பூரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்தேவரகொண்டா, தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி நடிகர் என்று அனன்யா பாண்டே கருத்து தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையாகி உள்ளது.
இதுகுறித்து அனன்யா பாண்டே அளித்துள்ள பேட்டியில், “திரைப்படங்களில் விஜய் தேவரகொண்டா தைரியசாலியாகவும், முரடனாகவும் நடிக்கிறார். ஆனால், நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி யாரோடும் அவ்வளவாக பேச மாட்டார். அவர் வேலையை முடித்துக்கொண்டு அமைதியாக இருப்பார். நடிப்பில் அவரிடம் எனக்கு நிறைய ஒத்துழைப்பு கிடைத்தது. ஆனாலும் சினிமாவில் காட்டுவது போன்ற தைரியம் அவருக்கு நிஜ வாழ்க்கையில் இல்லை’’ என்றார்.
விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி என்று கேலி செய்து அவமதித்து விட்டதாக விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அனன்யா பாண்டேவை வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…