ஜனநாயக கடமையை நிறைவேற்ற சென்னை திரும்பிய அஜித் குமார்

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். வெளிநாடுகளில் வசிப்பவர்களும் வாக்களிப்பதற்காக இந்தியா திரும்புவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஒரு விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் வாக்களிக்க வந்ததாக கூறப்படும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகரும் ரேசருமான அஜித் குமார், தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற சென்னை திரும்பியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அஜித் குமார் அண்மையில் பெல்ஜியத்தில் நடைபெற்ற உலகின் மிகவும் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான 24H Series போட்டியில் தனது அணியுடன் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த சாதனைக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அத்தகைய முக்கியமான சர்வதேச போட்டிக்குப் பிறகும், தனது வாக்குரிமையை பயன்படுத்துவதற்காக சென்னை திரும்பியுள்ள அஜித் குமார், ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளார். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த செயல், பலருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

ரஜினி, கமல் படத்தில் திரிஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

14 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…

14 hours ago

ராம் சரணின் “பெத்தி” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…

14 hours ago

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியை பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…

14 hours ago

“அந்த காலத்திலேயே விஜய் மிகப்பெரிய ஸ்டார்” – பிரியங்கா சோப்ரா

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…

14 hours ago

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

2 days ago