நகரில் உள்ள பணக்காரர்கள் வீடுகளை நோட்டம் விட்டு, பணம் பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த பின், வீட்டில் உள்ளவர்களை கொலை செய்கிறார்கள். இந்த கொலை-கொள்ளைகளை பற்றி போலீஸ் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மெக்கானிக் சார்லியும் அந்த கொலைகார கொள்ளையர்களிடம் சிக்குகிறார். மகன் விதார்த்தின் கனவு திட்டத்தை நிறைவேற்ற பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி வரும் வழியில், அந்த பணத்துக்காக அவரை கொள்ளையர்கள் கொலை செய்துவிடுகின்றனர். அப்பாவின் மரணம் மகன் விதார்த்தை பாதிக்கிறது. தன் அப்பாவை கொலை செய்த கொள்ளையர்களை பழி வாங்குவேன் என்று விதார்த் சபதம் எடுக்கிறார். அவருடைய சபதம் நிறைவேறியதா? அவரின் கனவு திட்டத்தை விதார்த் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அதிரடி நாயகனாக வரும் விதார்த் அவரின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். கொலை செய்யப்பட்ட அப்பா சார்லியை மடியில் போட்டுக்கொண்டு கதறும் காட்சியில், பார்வையாளர்களை கண் கலங்க வைக்கிறார். சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டி, ரசிக்க வைக்கிறார். இவரின் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷிரிதாராவ், அவரின் முகவசீகரத்தால் அனைவரின் கவனம் ஈர்க்கிறார். சார்லி மகன் மீது பாசமழை பொழியும் சீன்களில், நெகிழவைக்கிறார். கொள்ளையர்களின் தலைவனாக வம்சி கிருஷ்ணா வழக்கம்போல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

அதிரடி திகில் படமாக கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் கே.எல்.கண்ணன். கொலை-கொள்ளை காட்சிகளில் சற்று விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். புதுவிதமான கனவை பார்வையாளர்களுக்கு கடத்த நினைத்து பாராட்டுக்களை பெறுகிறார்.

இருந்தும் உயர்தர கனவை நனவாக்கும் முயற்சியை மிகவும் சாதரணமாக காட்சிப்படுத்தி அலுப்பை ஏற்படுத்தியிருக்கிறார். உதாரணத்திற்கு படத்தின் ஒரு இடத்தில் அவர் கண்டுபிடிக்கும் புதுவிதமான காரை வழிநடத்தும் கையில் கட்டியிருக்கும் மணிக்கட்டை மிகவும் சாதராணதாக கையில் கட்டி பார்வையாளர்களை சோர்வடைய செய்திருக்கிறார்.

அஸ்வின் ஹேமந்த் இசையில், பாடல்கள் எடுபடவில்லை. கொள்ளைகளும், கொலைகளும் நடைபெறும் இரவு நேரங்களை ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் திகிலாக பதிவு செய்து இருக்கிறார்.

மொத்தத்தில் ஆற்றல் – கவனம் தேவை.

aattral movie review
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

15 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

15 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

16 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

16 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

16 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

1 day ago