உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது தமிழ் சினிமாவையும் பாதித்து வருகிறது. ரஷியாவில் உருவாகி வரும் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சுல்தான்’ படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘கொரோனா அவுட் பிரேக் சுல்தான் படத்தின் அப்டேட் உட்பட எல்லாவற்றையும் பாதித்துள்ளது. அமைதியாக இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’ என்று கூறியிருக்கிறார். ரசிகர்கள் பலரும் சுல்தான் படத்தின் அப்டேட் கேட்டு வருவதால் இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு கூறியிருக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா நடிக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கிவருகிறார்.
#CoronaOutbreak is delaying everything including #Sulthan Update! Let’s keep calm and be safe!! ????✌????
— S.R.Prabhu (@prabhu_sr) March 13, 2020

