இந்த வாரம் நடக்கப்போகும் கடைசி எவிக்ஷனில் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் என்ன நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் இறுதி கட்டத்தில் நெருங்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே பார்வதி
கம்ருதீனுக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளிய அனுப்பிய நிலையில் வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார். வினோத் தான் டைட்டில் வின்னர் ஆவார் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் பண பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றது அவரது ரசிகர்களை அப்செட் ஆக்கி இருந்தது.
மொத்தம் தற்போது ஐந்து பேர் இருக்கும் நிலையில் இறுதியாக இன்று நடக்கப்போகும் எவிக்ஷனில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கடைசி ஓட்டுக்களுடன் சான்றா தான் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவும் சான்றா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


