Tamilstar
Health

நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த 3 சூப் குடிங்க..!

Are you suffering from diabetes? Then drink these 3 soups

நீரிழிவு நோயாளிகள் குடிக்க வேண்டிய மூன்று சூப் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் பெரும்பாலானோருக்கு வருகிறது. நீரிழிவு நோய் வர முக்கிய காரணம் ஆரோக்கிய மற்ற உணவு முறை. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உணவில் பெரும்பாலும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அப்படி நீரிழிவு நோயாளிகள் குடிக்க வேண்டிய மூன்று சூப் குறித்து பார்க்கலாம்.

முதலில் தக்காளி சூப் செய்ய தக்காளி மற்றும் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப உப்பு மற்றும் பூண்டு சேர்த்து ஒரு கப் தண்ணீரில் நன்றாக வேக வைத்து பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். சுவையான தக்காளி சூப் ரெடி ஆகும்.

இது மட்டும் இல்லாமல் உளுத்தம் பருப்பு வெங்காயம் கேரட் குடை மிளகாய் 10 நிமிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து சூப்பாக குடிக்கலாம்.

மூன்றாவதாக காளான் சூப். காளான் சூப் செய்ய ஒரு கப் காளான் ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு அரைக்கப் பால் அரை கப் வெங்காயம் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து இறக்க வேண்டும்.

இந்த வகையான சூப்புகளை குடித்து வந்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.