Tamilstar
Health

நெல்லிக்காய் நீரில் இருக்கும் பயன்கள்..!

Benefits of gooseberry water

நெல்லிக்காய் நீரில் இருக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.

அதிக ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் ஒன்று நெல்லிக்காய். இதில் ஊறுகாய் சட்னி போன்றவை சமைத்து சாப்பிடுவது வழக்கம். நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.

இது வைட்டமின் சி ,ஏ, ஈ, கால்சியம், நார்ச்சத்து, புரதம் போன்ற எக்கச்சக்க ஆரோக்கியங்கள் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். அப்படி குடித்து வந்தால் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

மேலும் இது முகத்தில் ஏற்படும் பருக்கள் சுருக்கங்கள் பிரச்சனையை நீக்கி முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் கூந்தலை வலுவாக வளர செய்யவும் முக்கிய பங்கு வகிக்கிறது.