atharvaa in cop
அதர்வா முரளி ஏற்கனவே ‘100’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அடுத்து இவர் மேலும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம், இது. ரவீந்த்ர மாதவா டைரக்டு செய்கிறார்.
இவர் டைரக்டர்கள் சுசீந்திரன், பூபதி பாண்டியன் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தவர். அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ படத்துக்கு வசனம் எழுதியவர். படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான ‘ஈட்டி’ படத்தில், அதர்வா கதாநாயகனாக நடித்து இருந்தார்.
படத்தை பற்றி டைரக்டர் ரவீந்த்ர மாதவா கூறியதாவது:- அதர்வா முரளி ஏற்கனவே ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தாலும், அந்த படத்தின் கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், இது. அதிரடி சண்டை காட்சிகளுக்கு அதர்வா முரளி அழகாக பொருந்துகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகியை தேடிக்கொண்டிருக்கிறோம். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கோடை விடுமுறை விருந்தாக படம் திரைக்கு வரும்.’’
திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…
ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…
இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…