poonam pandey
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கடந்த ஞாயிறன்று தனது ஆண் நண்பருடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றதாகவும், ஊரடங்கு சமயத்தில் காரணமின்றி பொதுவெளியில் சுற்றித்திரிந்த காரணத்தால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததாகவும் செய்திகள் பரவின. மேலும் அவரது விலை உயர்ந்த கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: நான் ஞாயிற்றுக்கிழமை இரவு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து மூன்று படங்கள் பார்த்தேன். இந்நிலையில் நான் கைது செய்யப்பட்டதாகக் நினைத்து அன்று இரவில் இருந்து எனக்கு நிறைய நண்பர்கள் போன் செய்து வருகிறார்கள். நானும் அது தொடர்பான செய்திகளை பார்த்தேன். தயவு செய்து என்னை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் வீட்டில் தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…
தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள 'தி ஒடிஸி' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோமரின்…
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti