Will famous Hindi actor Arjun Rampal be arrested
இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போதை பொருள் பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கி பலரை கைது செய்தனர்.
இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லாவின் தம்பி அஜிசிலோஸையும் போலீசார் கைது செய்து அந்தேரி, பாந்திரா பகுதிகளில் அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் சில போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அர்ஜுன் ராம்பாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதையேற்று போதை பொருள் போலீஸ் முன்பு ஆஜராகி அர்ஜுன் ராம்பால் விளக்கம் அளித்தார். அப்போது தனக்கு மனநல சிகிச்சைக்காக மாத்திரைகளை மன நல மருத்துவர் கொடுத்ததாக தெரிவித்தார். மருந்து சீட்டுகளையும் சமர்ப்பித்தார். மருந்து சீட்டுகள் போலியானவை என்று தெரியவந்தால் அர்ஜுன் ராம்பால் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…