கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் ஜனநாயகன் என்ற கடைசி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருக்கிறது.
தற்போது விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய மூணு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கிய நாளிலிருந்து விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நேர்காணல் ஒன்றில் சரத்குமார் விஜய் குறித்து பேசி உள்ளார் அதாவது கூட்டத்தை கட்டுப்படுத்துவது ஒரு தலைமைத்துவமான பண்பு எனவும் அதை அஜித் சரியாக செய்கிறார் விஜய் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
எடுத்துக்காட்டாக அஜித் துபாயில் நடந்த சம்பவம் ஒன்றில் எதுவும் சினிமா தியேட்டர் கிடையாது அமைதியா இருங்க என்று ரசிகர்களிடம் கண்டித்ததை சொல்லி இருக்கிறார். அந்த ஒரு சொல் போதும் என்று கூறியிருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல் பவுன்சர் கலாச்சாரத்தையும் நான் வெறுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay should learn from Ajith to control crowd Sarathkumar speech

