உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..!
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அண்டார்டிகாவில் படமாக்கப்படும் முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை ‘வாரணாசி’ படம் படைக்கும். இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலோ படக்குழு அண்டார்டிகா சென்று அங்கு சில காட்சிகளை படமாக்கும் என்று கூறப்படுகிறது. ராஜமௌலி அங்கு என்ன மாதிரியான காட்சிகளை காட்டப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த படத்தில் மகேஷ்பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’யாகவும் பிரித்திவிராஜ் ‘கும்பா’ என்ற வேடத்திலும் நடிக்கின்றனர். இந்த படம் 2027 ஏப்ரல் 7-ந்தேதி திரைகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்களிலேயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘வாரணாசி’ படம் குறித்து ராஜமௌலி தெரிவிக்கையில்.’ இப்படம் ஒரே பாகமாக வெளியாகும். அதன் ஓட்ட நேரம் சுமார் 3 மணி நேரம் இருக்கும்’ என கூறியுள்ளார்.


