தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தற்போது வரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங் முடிந்த கையோடு வாடிவாசல் படம் தொடங்கும் என தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் வேலைகளும் தொடர்ந்து ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
