The sudden decision of the great director Rajamouli
சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி, தனது கனவு படமான மகாபாரதத்திற்கு பிறகு திரைப்பட இயக்கத்திலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
‘பாகுபலி’ மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘RRR’ போன்ற பிரம்மாண்ட படைப்புகளை இயக்கிய ராஜமௌலி, தற்போது நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். காசியின் பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலியின் நீண்ட கால கனவான மகாபாரதத்தை திரைப்படமாக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இது குறித்து அவ்வப்போது பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மகாபாரதம் திரைப்படத் தொடருக்குப் பிறகு ராஜமௌலி சினிமாவில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இது குறித்து ராஜமௌலி தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனாலும், இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதுடன், ரசிகர்கள் பலரும் இது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் இது வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்திய சினிமாவுக்கு மேலும் பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுக்க காத்திருக்கும் ராஜமௌலி, இத்தகைய முடிவை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவரது அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…