தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் ஆயிரம் கோடி வசூலை அசால்டாக அடித்து வருகிறது இது குறித்து பேசிய சிவகார்த்திகேயன் தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடி வசூலிப்பதற்கு முக்கிய காரணமே தயாரிப்பாளர்கள் தான் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


