புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தில் சுவாசிக்கா, யோகி பாபு நட்டி நடராஜ் திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 46 என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா புதியதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “ழகரம்”என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பதாகவும் அதில் முதலாவதாக ஜித்து மாதவனின் படமும் இரண்டாவதாக பா ரஞ்சித்தின் ஒரு படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


