கேரள நடிகை பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த திலீப், வழக்கின் சாட்சியங்களை கலைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் நடிகர் திலீப் பயன்படுத்தி வந்த அனைத்து செல்போன்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நடிகர் திலீப், திருவனந்தபுரத்தை சேர்ந்த பாதிரியார் விக்டர் எவரெஸ்டியஸ் என்பவருடன் அடிக்கடி பேசியதும், வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர் திலீப், கைது ஆவதற்கு முன்பும், அவர் ஜாமீனில் விடுதலை ஆனபிறகும், பாதிரியார் அவருடன் பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது.

இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் பாதிரியார் விக்டர் எவரெஸ்டியசை விசாரிக்க முடிவு செய்தனர். எனவே அவருக்கு சம்மன் அனுப்பபட்டது.

போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பாதிரியார் விக்டர் எவரெஸ்டியஸ் போலீசார் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதில் நடிகர் திலீப்புடன் நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்ததாக அவர் கூறியுள்ளார். வழக்கு தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும், திலீப் ஜாமீனில் வந்த பிறகு நண்பர் என்ற முறையில் அவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறியுள்ளார். நடிகை பலாத்கார வழக்கு தொடர்பாக பாதிரியார் விக்டர் எவரெஸ்டியசிடம் போலீசார் விசாரணை நடத்தி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Suresh

Recent Posts

O Kadhale Song

O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…

4 hours ago

பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

6 hours ago

சென்னையில் ப்ரோவோக் ஆர்ட் பெஸ்டிவல் – நவம்பர் 1, 2 அன்று இசைக்கல்லூரியில் கலைவிழா

பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…

6 hours ago

பார்வதி சொன்ன விஷயம், வாட்டர் மெலன் கொடுத்த பதில் வெளியான இரண்டாவது ப்ரோமோ

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

11 hours ago

டியூட்: 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

12 hours ago

ஒன்று சேர்ந்த சீதா,மீனா.. முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…

12 hours ago