கேரள நடிகை பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த திலீப், வழக்கின் சாட்சியங்களை கலைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் நடிகர் திலீப் பயன்படுத்தி வந்த அனைத்து செல்போன்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நடிகர் திலீப், திருவனந்தபுரத்தை சேர்ந்த பாதிரியார் விக்டர் எவரெஸ்டியஸ் என்பவருடன் அடிக்கடி பேசியதும், வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர் திலீப், கைது ஆவதற்கு முன்பும், அவர் ஜாமீனில் விடுதலை ஆனபிறகும், பாதிரியார் அவருடன் பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது.

இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் பாதிரியார் விக்டர் எவரெஸ்டியசை விசாரிக்க முடிவு செய்தனர். எனவே அவருக்கு சம்மன் அனுப்பபட்டது.

போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பாதிரியார் விக்டர் எவரெஸ்டியஸ் போலீசார் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதில் நடிகர் திலீப்புடன் நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்ததாக அவர் கூறியுள்ளார். வழக்கு தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும், திலீப் ஜாமீனில் வந்த பிறகு நண்பர் என்ற முறையில் அவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறியுள்ளார். நடிகை பலாத்கார வழக்கு தொடர்பாக பாதிரியார் விக்டர் எவரெஸ்டியசிடம் போலீசார் விசாரணை நடத்தி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Suresh

Recent Posts

குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?என்ற கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன பதில்.!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…

6 hours ago

சினிமாவில் இருந்து விலகப் போகிறார் அஜித்? ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி.!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

6 hours ago

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…

22 hours ago

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…

22 hours ago

விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு – முழு விவரம்

விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…

22 hours ago

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..!

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…

23 hours ago