சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார்! தந்தை – மகன் சென்டிமென்ட் கதை!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘பராசக்தி’ மற்றும் ‘மதராஸி’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது 24வது திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கடந்த ஆண்டு ‘குட் நைட்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் இயக்கவுள்ளார். தற்போது இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது ஒரு உணர்வுப்பூர்வமான தந்தை-மகன் உறவை மையமாக கொண்ட கதை என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஹைலைட்டே, சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்க மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதுதான். பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மோகன்லால் ஏற்கனவே தமிழில் விஜய்க்கு தந்தையாக ‘ஜில்லா’ படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இந்த கூட்டணி உறுதியானால், இது தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சிவகார்த்திகேயனும், மோகன்லாலும் இணைந்து திரையில் தந்தை மகனாக நடித்தால், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ‘குட் நைட்’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த விநாயக் சந்திரசேகர், இந்த சென்டிமென்ட் கதையை எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தந்தை-மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், மோகன்லால் இணைவது படத்தின் கதைக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரின் ரசிகர்களும் இந்த மாஸ் கூட்டணியை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்


sivakarthikeyan upcoming movie update
jothika lakshu

Recent Posts

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

14 hours ago

The India Story Official Film Teaser

The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…

14 hours ago

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ – திரை விமர்சனம்

கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…

17 hours ago

ப்ராமிஸ் – திரை விமர்சனம்

கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…

17 hours ago

‘பாகுபலி 3’ உருவாகிறதா?… மரண மாஸ் அப்டேட்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…

18 hours ago

உலக அரங்கில் மீண்டும் இந்தியாவுக்கு பெருமை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘கோல்டன் பிளேட்’ விருது!

இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…

18 hours ago