தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கோங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மும்பையில் இயக்குனர் சாய் லீலா பன்சாலியன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து உள்ளார் இவர்களது சந்திப்பு புதிய படத்தில் கூட்டணியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
ஆனால் இது குறித்த காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. இவர்களை இந்த சந்திப்பு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.


