வருத்தத்தில் மனோஜ். வீட்டுக்கு வந்த ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ரோகினி வீட்டுக்கு இவர்கள் வந்திருக்க அவரது அம்மா சமாளித்துக் கொண்டிருக்க கிரிஷ் ஏரோபிளேன் எடுத்து மனோஜிடம் காட்டி என்கிட்ட ஏரோபிளேன் இருக்கு உங்க கிட்ட இருக்கா என்று கேட்கிறான். எங்க அத்தை வாங்கி கொடுத்தாங்க என்று சொல்ல மீனா யாருமா உங்க பொண்ணு துபாயில் இருந்து வந்து இருக்காங்களா என்று கேட்க இல்லமா வேற ஒரு பொண்ணு வந்து போனா அது தான் சொல்றான் என்று சமாளிக்கிறார். உடனே கிரிஷ் கல்யாணி அத்தை பாட்டி என்று சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ரோகிணியின் போட்டோவை காட்டி இவங்களை இங்கே எங்கேயாவது பார்த்தீர்களா என்று விசாரிக்க அவர் இங்கு பார்க்கவில்லை என்று சொல்கிறார். முத்து இதுக்கு மேல எங்க போய் தேடறது அவ்வளவு தான் என்று சொல்ல மனோஜ் என்ன முழுசா நம்பின ரோகிணியை நான் ஏமாத்திட்டேன், பெரிய தப்பு பண்ணிட்டேன். என் பொக்கிஷத்தை தொலைச்சிட்டேன் என் அம்மாவுக்கு அப்புறமா என் மேல் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தது ரோகிணி தான் அவ இல்லாம இனிமே என்ன பண்ண போறேன் என கண் கலங்கி அழுகிறார்.

ரோகினியின் அம்மா கவலைப்படாதீங்க தம்பி அவங்க கண்டிப்பா வீட்டுக்கு வந்துடுவாங்க என்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு முத்து உனக்கும் பொண்ணுங்களுக்கும் செட்டே ஆகல பேசாம காசிக்கு போயிடு என நக்கல் அடிக்கிறார்.

மீனா கொஞ்ச நேரம் சும்மா இருங்க வீட்டுக்கு போகலாம் கண்டிப்பா அவங்களே கோபம் தணிந்து வந்துருவாங்க என்று சொல்லி கிளம்பி செல்கின்றனர். மறுபக்கம் ரோகினியின் அம்மா மாப்பிள்ள சொக்கத்தங்கம் செஞ்ச தப்புக்காக கவலைப்படுறாரு, உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு, அதை கெட்டியா பிடிச்சுக்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மனோஜ் வீட்டுக்கு வந்ததும் அம்மாவை பிடித்து ரோகிணி எங்கனு தெரியலை என அழ விஜயா ரோகினி வந்துவிட்டார் என்று சொல்ல முயற்சி செய்ய மனோஜ் சொல்ல விடாமல் அழுது கொண்டே இருக்கிறார். எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் இவனால் தான் ரோகிணி என்னை விட்டு போயிட்டா என்று அழுகிறார். முத்து உனக்காக டீசல் போட்டு வந்தேன் பாரு, நன்றியே இல்லடா உனக்கு என்று பேச ரூமுக்குள் இருந்து ரோகினி வெளியே வந்து போதும் நிறுத்துங்க என சத்தம் போடுகிறார்.

வீட்ல இருந்துட்டு தான் எங்கள அலைய விட்டயா கோபப்படுகிறார் முத்து. என் புருஷன பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசக்கூடாது என சொல்ல அவன் உன்னை ஏமாத்தி இருக்கான் என்று முத்து சொல்ல அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு என்ன நஷ்டம் என ரோகிணி கேள்வி கேட்கிறார்.

அதன் பிறகு அண்ணாமலையிடம் இனிமே அவர பத்தி யாரும் எதுவும் பேசக்கூடாது நீங்க கேள்வி கேளுங்க உங்களுக்கு அந்த ரைட்ஸ் இருக்கு ஆனா மத்தவங்க அவரை அவமானப்படுத்தி பேசுவதை பார்க்க முடியாது. அப்படி யாராவது பேசினால் இனிமே நாங்க இந்த வீட்ல இருக்க மாட்டோம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai serial episode-update
jothika lakshu

Recent Posts

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

2 days ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

2 days ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

2 days ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

2 days ago

“பரோட்டா சூரி மாதிரி கோட்ட அழிக்க வைக்காதீங்க!” – நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…

2 days ago

“நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்!” – வெங்கட் பிரபுவின் X பதிவு வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…

3 days ago