siragadikkaaasai serial today episode update 16-09-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில் சூடு வைத்து விடுவதால் முத்து பாட்டிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பாட்டி விஜயாவை கண்டிக்கிறார்.இதுக்கு அப்புறம் சூடு வைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத என்று சொல்லி திட்டுகிறார். நீங்கதான் அவன சரியா வளக்கல என்று சொல்ல உன்னை யாரு அப்ப ஜோசியக்கார பேச்சை கேட்டு இங்க எடுத்துட்டு வந்து விட சொன்னது என்று சொல்லி சொல்லுகிறார்.முத்து நல்ல பையன் அவன் கிட்ட அன்பா நடந்துகிட்டா அவன் பாசத்தை காட்டுவான் என்று சொல்லி உன்னை வைக்கிறார். பிறகு அண்ணாமலை வர என்ன பாட்டி வீட்டுல விட்டுடுங்க பா என்று சொல்ல நீ இங்கதான் படிக்கணும் என்று சொல்லி அழைத்துச் சென்று விடுகிறார்.
மனோஜ் படித்துக்கொண்டிருக்க விஜயா மனோஜ் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் பார்வதி வந்து மனோஜ் எப்படி படிக்கிறான் என்று கேட்க அவன் எப்பவுமே படித்துக்கொண்டே தான் இருக்கும் ஒரு காலத்துல பெரிய பிசினஸ் மேன் பணக்காரனாக போறான் என்று சொல்ல பிறகு முத்து என்ன பண்றான் என்று கேட்க அதற்குள் முத்து வருகிறார்.பிறகு விஜயா பேசி கொண்டிருப்பதை மறைந்து நின்று கேட்கிறார். எனக்கு அவ மேல நம்பிக்கை இல்ல எங்க மாமியார் அவன சரியா வளக்கல பொய் சொல்றான் அடிதடில இறங்கி இருக்கான் என்று சொல்ல இப்போ இதைக் கேட்டு வருத்தப்படுகிறார். மனோஜ் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்க முத்து வந்து நான் கொஞ்ச நேரம் விளையாடுகிறேன் என்று கேட்கிறார் இது அம்மா எனக்காக வாங்கி கொடுத்தது நான் தரமாட்டேன் என்று சொல்ல முத்துவும் அமைதியாக சென்று விடுகிறார்.உடனே விஜயா பக்கத்து வீட்டுக்காரர் வந்து உங்க பையன் என்னோட பையனோட வீடியோ கேமை கூட்டிட்டு வந்திருக்கான் என்று சொல்ல இதை கவனித்த மனோஜ் உடனே முத்துவை கூப்பிட்டு வீடியோ கேம் கொடுக்கிறார்.
வீட்டுக்குள் வந்த விஜயா முத்து கையில் இருப்பதை பார்த்து இவன் தான் இப்படி பண்ணி இருப்பான் என்று நினைத்தேன் என சொல்லிவிட்டு முத்து கையில் இருப்பதை பிடுங்கி பக்கத்து வீட்டுக்கார பெண்ணிடம் கொடுத்து விடுகின்ற உடனே எதுக்குடா பொய் சொல்ல எதுக்குடா இப்படி திருடனா என்று சொன்னால் நான் திருடல மனோஜ் தான் வச்சுட்டு இருந்தான் அவன் கொடுத்தான் என்று சொல்ல, பொய் சொல்றத முதல்ல நிறுத்து உன்ன பாட்டி சரியாவே வளக்கல என்று சொல்ல பாட்டியை பத்தி தப்பா பேசாதீங்க என்று சொல்லி கோபப்பட வேண்டும் விஜயா முத்துவை அடிக்கிறார். ஸ்கூலில் ரேங்க் கார்டு கொடுக்க மனோஜ் இரண்டாவது ரேங்க் வாங்குகிறார். ஆனால் முத்து கடைசியா இருக்கு வாங்க டீச்சர் அவரை எதுவுமே ஸ்கூலுக்கு வரத்தையே நீ விட்டுடு என்று சொல்லி திட்ட அமைதியாக வந்து வெளியில் இருக்கிறார் மனோஜ் வந்து என்ன ரேங்க் வாங்கி இருக்க காட்டு என்று பார்த்துவிட்டு இதெல்லாம் ஒரு ரேங்க் என்று சொல்லுகிறார். உன்னோடத காட்டு என்று சொல்ல மனோஜ் காட்ட அப்போ உன்னோட ஒருத்தன் நல்லா படிச்சு இருக்கா என்று சொல்லுகிறார். உன்ன பாட்டி சரியாவே வளக்கல நீ ரவுடியா இருக்க என்று மனோஜ் சொல்ல, உடனே இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முத்து மனோஜ் அடித்து விடுகிறார்.
பிறகு அனைவரும் வந்து தடுத்துவிட ஒரு ஆசிரியர் முத்துவுக்கு முட்டி போட சொல்லி பனிஷ்மென்ட் கொடுத்து அனைவரையும் அனுப்பி விடுகிறார்.பிறகு வீட்டில் சொந்தக்காரர்கள் வந்துவிட அவர்கள் மனோஜை பார்த்து உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என்று கேட்க எனக்கு அம்மா தான் பிடிக்கும் என மனம் சொல்லுகிறார் முத்துவிடம் கேட்க எனக்கு பாட்டி தான் பிடிக்கும் என சொல்லுகிறார் அப்போ உனக்கு உங்க அம்மாவை பிடிக்காதா என்று சொல்லிவிட்டு வந்தவர்கள் சென்று விட விஜயா வழக்கம் போல் முத்துவுடன் ஏன் உனக்கு அம்மாவும் அப்பாவும் பிடிக்கும்னு சொல்லத் தெரியாதா வந்தவங்க முன்னாடி இப்படி பேசிட்டு இருக்க என்று சொல்லுகிறார் எனக்கு பாட்டி தான் பிடிக்கும் என மீண்டும் சொல்ல நீ அப்போ பாட்டி வீட்டுக்கு போயிடு இங்க இருக்காத என்று சொன்னவுடனே மனோஜ் ஏத்தி விடுகிறார். விஜயா ரூமுக்குள் சென்ற கதவை சாத்திக்கொள்ள நான் பாட்டி வீட்டுக்கு போகலாமா நான் இங்கே இருக்கேன் கதவை திறங்கம்மா என்று முத்து தெரிஞ்சா அண்ணாமலை வருகிறார். என்ன விஷயம் என்று கேட்க அம்மா என பாட்டி வீட்டுக்கு போக சொல்றாங்கப்பா என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.
பிறகு முத்து இந்த விஷயத்தை எல்லாம் மீனா கிட்ட சொல்ல நீங்க பாசத்துக்காக ஏங்கி இருக்கீங்கன்னு மட்டும் நல்லா தெரியுது இந்த சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு எப்படி போனிங்க என்று கேட்க ஸ்கூலில் first rank எடுத்த பையனை மனோஜ் அடித்து விட்டதாக அழுது கொண்டு இருக்க முத்து வந்து எதுக்கு அழுகுற என்று கேட்கிறார். மனோஜ் எதுக்கு எடுத்தேன்னு என்னோட நோட்புக்கை கிழிச்சிட்டா இனிமே உனக்கு ஆன்சர் தெரிஞ்சா கூட எழுத கூடாதுன்னு மிரட்டுறான் என்று சொல்ல உடனே முத்து அவனை அழைத்துக் கொண்டு மனோஜிடம் சென்று எதுக்கு இப்படி பண்ண என்று அடிக்கிறார். அப்பா கிட்ட சொன்னேனா அவ்வளவுதான் இதுக்கு மேல இப்படி பண்ணாத என்று திட்ட பிறகு என்ன நடக்கிறது? மனோஜ் என்ன செய்கிறார்? அந்த பழியை தூக்கி முத்து மீது எப்படி போடுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
[Best_Wordpress_Gallery id="1047" gal_title="Blast Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1043" gal_title="Fahadh Faasil and C Prem Kumar New Movie Launch"]
[Best_Wordpress_Gallery id="1041" gal_title="Poo Kaai Kani Movie Pooja Stills"]
[Best_Wordpress_Gallery id="1039" gal_title="Athiradi Movie Pre Release Event"]
[Best_Wordpress_Gallery id="1037" gal_title="Sattendru Maarudhu Vaanilai Pre-Release Event"]