SiragadikkaAasai Serial Episode Update 23-07-25
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரதி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட பின் விஜயா மயங்கி விழுந்து விடுகிறார் உடனே பார்வதி அவரை தண்ணீர் தெளித்து உட்கார வைக்கிறார். கல்யாணம் ஆகாத பொண்ணு எப்படி கர்ப்பமா இருக்க முடியும் என்று சொல்ல எல்லாத்துக்கும் அந்த தீபன் தான் காரணமா இருப்பான் என்று பார்வதி சொல்லுகிறார். முத்துவும் மீனாவும் எவ்வளவு சொன்னாங்க நம்ப தான் நம்பல என்று சொல்ல கொஞ்ச நாளைக்கு டான்ஸ் கிளாஸ் எதுவும் வேணாம் எனக்கு என்னமோ பயமா இருக்கு என்று விஜயா சொல்லுகிறார்.
மறுபக்கம் முத்துவும் மீனாவும் கிரிசை அழைத்து வந்து ரோகிணியின் அம்மாவை சந்தித்து பேசுகின்றனர் நலம் விசாரித்துவிட்டு பிறகு ரோகிணியின் அம்மா க்ரிஷ் எங்களோட சொந்தக்காரங்க வீட்ல இருக்கட்டு என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் நாங்களே பார்த்துகிறோம் என்று சொல்லுகின்றனர் ரோகிணி இதையெல்லாம் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார் நீங்கள் வேணா கிரிஷ்கிட்ட கேளுங்க எங்க இருக்கிறாங்க நீங்க அவனை விருப்பப்பட்டால் கூட்டிட்டு போய்விடுங்கள் என்று சொல்ல இல்ல பாட்டியை நான் மீனா ஆன்ட்டி வீட்ல தான் இருப்பேன் எனக்கு அங்க இருக்க தான் பிடிச்சிருக்கு என்று சொல்ல ரோகிணி அம்மா எவ்வளவு சொல்லியும் இருவரும் கேட்காமல் இருக்கின்றன. பிறகு முத்து பணம் கட்டி விட்டு இருவரும் கிளம்பி விடுகின்றனர்.
அவர்கள் சென்றவுடன் ரோகிணி வந்து பேச முத்து மீனா வந்தாங்க என்று சொல்ல அவங்க பேசுறது எல்லாம் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் என்று சொல்லுகிறார் அவங்க நல்லவங்களா தான் இருக்காங்க உன் குடும்பமும் நல்ல குடும்பம் தான் நீ உண்மைய சொல்லிடு முத்து மீனா உன்ன பார்த்துப்பாங்க என்று சொல்ல உடனே ரோகினி நீ என்னோட வாழ்க்கையில எடுத்து எல்லாம் முடிவும் தப்புதான் நீ சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது என்று சொல்லிவிட்டு பணத்தை எடுத்து கையில் கொடுத்து விட்டு இந்த காசை நீ முத்து கிட்ட கொடுத்துட்டு மீதி செலவுக்கு வச்சுக்கோ நான் உனக்கு இருக்கேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
ரவி ரூமுக்கு வர நீ என்ன முடிவெடுத்து இருக்க என்று கேட்க பிரஷ் ஆகிட்டு போய்ட்டு தூங்கலாம்னு முடிவு எடுத்து இருக்கேன் என்று சொல்லுகிறார் அத பத்தி கேட்கல ரெஸ்டாரன்ட் எப்போ ரிசைன் பண்ணிட்டு வரப்போற என்று கேட்க நீ எப்ப கேட்டாலும் ஒரே பதில் தான் என்னால இப்ப வர முடியாது என்று வா சொல்லிவிட சுருதி டென்ஷன் ஆகி உனக்கு இன்னும் மூணு மாசம் தான் டைம் அதுக்குள்ள நீ முடிவு எடுக்கல நான் என்னோட முடிவு வேற மாதிரி இருக்கும் என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிறார் மறுபக்கம் ரோகினி வித்யாவிற்கு ஃபோன் போட்டு நான் உன்கிட்ட அது பேசினது தப்புதான் எனக்கு ஒன்னு விட்டா வேற யாரடி பிரண்ட் இருக்கா இந்த மாதிரி அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு கொஞ்ச நாள் கிருஷை உங்க வீட்டில் தங்க வச்சுக்க என்று சொல்ல என் மேலயும் உனக்கு கோவம் எல்லாம் இல்லடி நீ முருகன் கிட்ட பணம் கேட்டதால தான் எனக்கு கோபம் வந்துடுச்சு என்று சொல்லுகிறார்.
நான் இப்போ ஊர்ல இல்ல கல்யாண விஷயமா பேசறதுக்காக ஊருக்கு போய்கிட்டு இருக்கேன் ஒரு வாரம் ஆகும் வர்றதுக்கு என்று சொல்ல சரியென சொல்லி போனை வைத்து விடுகிறார் மீண்டும் கிருஷ் தூங்காமல் ரோகினி ரூமுக்கு ஓடி வந்து விட பிறகு என்ன நடக்கிறது? மீனா என்ன கேட்கிறார்? அதற்கு ரோகினியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…
TN 2026 Movie Teaser | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka Siva | Kannan…
Manithan Deivamagalam Official Trailer | Selvaraghavan | Kushee Ravi | Dennis Manjunath
Kathanar Official Trailer (Tamil) | Jayasurya | Anushka Shetty | Rojin Thomas | Gokulam Gopalan