siragadikkaaasai serial episode update 01-11-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு என் புள்ள மனோஜ் எவ்வளவு பெரிய ஆடர் வாங்கி இருக்கான் என்று சொல்ல இந்த ஆர்டர் வாங்குவது நானு இல்லம்மா ரோகினி என்று சொல்லுகிறார் உடனே விஜயா என் மருமக திறமையானவரா தான் இருப்பாய் என்று உடனே சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர் 40 லட்சம் லாபம் வரும் என்று சொன்னவுடன் வழக்கம் போல் ரோகிணிக்கு ஆதரவாக விஜயா பல்டி அடித்து பேசுகிறார் உடனே ரோகினி நீ உட்காருமா கால் வலிக்க போகுது என்று சொல்லிவிட்டு சாரில் உட்கார வைக்கிறார் பிறகு இதையெல்லாம் பார்த்து ஸ்ருதி கடுப்பாகி மீனாவிடம் இப்படி எல்லாம் பொய் சொல்லி நடிக்க முடியுமா என்று கேட்கிறார். உடனே மீனாவிடம் அங்கு என்ன வாய் பேசிகிட்டு இருக்க சுக்கு காபி போட்டு எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார்.
உடனே முத்து மீனாவுக்கும் 275 வீட்டுக்கு பூ கற்ற ஆடர் கிடைச்சிருக்கு அவ ஒரு நாளைக்கு 50 ரூபாய் லாபம் சம்பாரிச்சாவே என ஆரம்பித்து அஞ்சு வருஷத்திற்கான முதலீட்டைல்ஸ் சொல்ல ஒரு கோடி வருவதை பார்த்து விஜயாவும் குடும்பத்தினரும் வாய்ப்பிளந்து நிற்கின்றனர் மீனா கோடீஸ்வரி என்று விஜயாவிடம் சொல்லுகிறார் உடனே ஸ்ருதி கைதட்டி சந்தோஷப்பட டிவி பிரிட்ஜ் ஆவது ஒருவாட்டி வாங்கலாம் நாலஞ்சு வருஷம் ஆகும் ஆனா பூ டெய்லி வாங்கணும் என்று சொல்ல அனைவரின் முகம் மாறுகிறது. பிறகு விஜயா சென்று விட மனோஜ் ரோகினி என அனைவரும் சென்று விடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் மீனாவும் ஸ்ருதியும் காபி குடித்துக்கொண்டிருக்க ரோகிணி வந்து உட்காருகிறார்.
என்ன ரோகினி எப்படி இருக்கீங்க என்று கேட்க நான் எப்படி இருக்கேன் என்று கேட்கிறார் நல்லா தானே இருக்க எல்லாம் சரியா தான இருக்கு என்று சொல்ல உங்க தலை குள்ள தான் ஒண்ணுமே இல்ல என்று சொல்லுகிறார். எதுக்காக இப்படி பேசுறீங்க என்று கேட்க உங்களுக்கு இந்த ஆர்டர் வாங்கி கொடுத்ததே மீனாதான் ஆனா உங்களால கெடச்ச மாதிரி அவ்வளவு அழகா பேசி இருக்கீங்க என்று சொல்ல ஏற்கனவே எனக்கு அந்த மேடம் பிரைடல் மேக்கப் போடுற இடத்துல எனக்கு தெரியும் அதனால தான் எனக்கு இந்த ஆர்டர் கொடுத்தாங்க என்று சொல்ல உங்களுக்கு அப்படி அவங்கள போய் சந்திக்க சொன்னதே மீனா தானே என்று சொல்ல அதற்கு ரோகிணி ஒருத்தருக்கு ஒரு வேலை கிடைக்கணும்னா அவங்களுக்கு வழி சொல்றவங்க எல்லாம் அவங்களுக்கு காரணமாயிட முடியாது என்று பேசிவிட்டு போக ஸ்ருதி ரோகினியிடம் கோபமாக பேச ரோகினி அந்த ஆர்டர் வாங்கினதுக்கு காரணம் நான் தான் என்பது போல பேசிவிட்டு சென்று விடுகிறார்..
இரவு மீனா உட்கார்ந்து கொண்டிருக்க முத்து எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டு இருக்கிறார் எதற்கு இப்படி யோசிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க உனக்கு 275 வீட்டில பூ கட்டுற ஆர்டர் வந்திருக்குன்னு சொன்ன பார்லர் அம்மா பர்னிச்சர் ஆர்டர் வந்திருக்கேன்னு சொல்லுச்சு ஏதோ நிக்குது என்று கேட்க பிறகு மீனா ஆர்டர் வாங்கி கொடுத்ததற்கான காரணத்தை சொல்ல அப்போ இதுக்கு காரணம் நீ தானா அதை ஏன் நீ பார்லர் அம்மாகிட்ட தனியா சொன்ன குடும்பத்தில் இருக்கிற எல்லார்கிட்டயும் சொல்லி போய் பார்க்க சொல்லி இருக்கலாமே என்று சொல்ல அதெல்லாம் எதுக்குங்க அவங்க மேல அத்தை கோவமா இருந்தாங்க இப்பதான் மாறி இருக்காங்க என்று சொல்லுகிறார் இருந்தாலும் நீ பண்ண உதவிக்கு ஒரு தேங்க்ஸ் கூட அந்த பார்லர் அம்மாவுக்கு சொல்ல மனசு இல்லையா மனோஜ் கூட இருக்குல்ல அதுக்கு எப்படி மனசு இருக்கும் என்று கேட்கிறார். உடனே மீனா நான் அதெல்லாம் எதிர்பார்த்து எதையுமே செய்யலைங்க என்று சொல்லுகிறார். பிறகு முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? சிவன் பார்வதி என்ன செய்கின்றனர்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
[Best_Wordpress_Gallery id="1047" gal_title="Blast Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1043" gal_title="Fahadh Faasil and C Prem Kumar New Movie Launch"]
[Best_Wordpress_Gallery id="1041" gal_title="Poo Kaai Kani Movie Pooja Stills"]
[Best_Wordpress_Gallery id="1039" gal_title="Athiradi Movie Pre Release Event"]
[Best_Wordpress_Gallery id="1037" gal_title="Sattendru Maarudhu Vaanilai Pre-Release Event"]