சண்டை போட்டு பிரிந்த ரோகினி,வித்யா.. முத்துவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

முத்து பிளான் போட, ரோகிணியை அலற விட்டுள்ளார்உள்ளார் மீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் வித்யாவிற்கு இடையே வாக்குவாதம் அதிகரிக்க நீ ஒரு நல்ல பிரண்டே கிடையாது எனக்கு துரோகம் பண்ணிருக்க என்று சொல்ல உன் குடும்பத்துக்குமே உன் புருஷனுக்குமே நீ உண்மையா இல்ல நீ என்ன சொல்றியா இவ்வளவு பண்றவ என்னைக்கு நான் உன்னால என்னையும் தூக்கி போட்டு போக மாட்டேன் என்று என்ன நிச்சயம் என்று சொல்லிவிட்டு கிளம்பச் சொல்லுகிறார். உடனே ரோகினையும் இனிமேல் உனக்கு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் முத்து யோசித்துக் கொண்டிருக்க மீனா வருகிறார். இந்த வீடியோவை யார் ரிலீஸ் பண்ணி இருப்பாங்க என்று ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்க உடனே சத்யாவிற்கு ஃபோன் பண்ணி விசாரிக்கின்ற சத்தியா சிட்டி மூலமா வெளிய வரலன்னு தான் சொல்றாங்க மாமா என்று சொன்ன சரிவை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார் எனக்கு என்னமோ இது பார்லர் அம்மாவோ இல்ல இந்த வித்யாவும் பண்ணி இருக்கணும். தாத்தா பாட்டி என்ன சொன்னாங்க ஒரு பொண்ணு தொலைச்சிட்டு போச்சுன்னு சொன்னாங்க அவங்க கிட்ட இவங்க ரெண்டு பேரோட போட்டோவ காமிச்சா சரியா போயிடும். ஏற்கனவே பார்லர் அம்மா மேல ஒரு சந்தேகம் இருந்தது இப்போ அதிகமா இருக்கு என்று சொல்ல ஒரே குடும்பத்திலிருந்து கிட்ட அவ்வளவு வன்மமா நடந்துக்க முடியுமாங்க என்று கேட்க தெரிஞ்சுகிட்டா போது என்று சொல்லி வித்யாவோட போட்டோ உன்கிட்ட இருக்கா என்று கேட்கிறார்.

இல்லை என்று சொல்ல நாளைக்கு எப்படியாவது அவங்க வீட்டுக்கு போய் அந்த பொண்ணுக்கு தெரியாம ஒரு போட்டோ எடுத்துட்டு வந்துரு மீனா என்று சொல்ல வேண்டும் சரியா சம்மதிக்கிறார் மறுநாள் காலையில் வித்யா வேலைக்கு கிளம்பி கொண்டிருக்க வித்யாவை சைட் அடிக்கும் நபர் வருகிறார். நீங்க ஏன் ரெண்டு நாளா வெளியவே வரல என்று கேட்க நான் லீவுல இருக்கேன் என்று சொல்லுகிறார். அதனால தான் உங்கள பாத்துட்டு போக வந்தேன் என்று சொல்ல நீங்க எதுக்கு என்னை பார்க்கணும் என்று வித்யா கேட்கிறார். எல்லாம் ஒரு அக்கறை தாங்க இன்று சொல்ல, உடனே அவர் காதல பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்கிறார். அதற்கு எதுவும் தெரியாதது போல் வித்யா காட்டிக் கொள்ள சரி நான் கிளம்புறாங்க என்று சொல்லுகிறார். ஒரு நிமிஷம் என நிக்க வைத்து எனக்கு கல்யாணம் ஆயிடிச்சானு கேட்டீங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று வித்யா கேட்க அதற்கு அவர் சீக்கிரம் ஆகிடும் என்று நினைக்கிறேன் என்று வித்யாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார் உடனே ரூமுக்குள் வந்து வித்தியா, அவர் மேல் காதல் வந்தது போல் வெட்கப்பட்டு சிரிக்கிறார். பிறகு யோசித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க மீனா வருகிறார்.

நானே உங்ககிட்ட பேசலாமுனு நினைச்சேன் ஒருத்தர் நல்லவரா கெட்டவரா என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது என் பின்னாடியே வந்து பாலோ பண்ணிக்கிட்டு இருக்கான் அவனை பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக கேட்கிறேன் என்று சொல்ல போலீஸ் ஸ்டேஷன் கொடுக்க வேண்டியது தான என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல இவர் நல்லவர் தான் என்று சொல்லி கேட்கிறார் இதுல என்னங்க இருக்கு இப்ப எல்லாம் போன் வாங்கி பார்த்தாலே தெரிந்துவிடுகிறது நீங்க ஒரு நாள் ஃபுல்லா அவரோட போன் வாங்கி வச்சுக்கோங்க அதுலையே தெரிஞ்சிடும் என்று சொல்ல நான் அதே மாதிரி பண்றேன் என்று சொன்னவுடன் அப்போ உங்களுக்கு ஒரு ஆளு பார்த்து வச்சிருக்கீங்களா என்று சொன்னவுடன் வித்யா வெக்கப்பட்டு ஓடி நிற்கிறார் வெட்கத்தில் முகம் எல்லாம் சிவந்திருக்கு என்று சொல்லி உடனே மீனா உங்களை ஒரு போட்டோ எடுத்து காட்றேன் பாருங்க எங்களுக்கு எடுத்துக்காட்டி மீனா வந்த வேலையை முடிக்கிறார்.

பிறகு முத்து விடம் போட்டோவை கொடுக்க அவர் ரோகிணி மற்றும் வித்யாவின் புகைப்படத்தை தாத்தா பாட்டியின் சொந்தக்காரர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.அவரிடம் போன் பண்ணி சொல்லிவிட நான் வெளியூர் வேலைக்கு வந்து இருக்கேன் இன்னும் ரெண்டு நாள் ஆகும் போயிட்டேன்னா போன் பண்றேன் என்று சொல்லுகிறார் சரி அப்படித்தான் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனை வைக்கின்றன.

ரோகிணி தூங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் மனோஜ் இல்லாததை பார்த்து வெளியில் வந்து தேடுகிறார் யாருமே வீட்டில் இல்லாதது போல் தெரிய மீனா பேய் வேஷம் போட்டுக் கொண்டு நிற்பதை பார்த்து மீனா நீங்க என்ன பண்றீங்க என்று கேட்டுக்கொண்டே இருக்க மீனா பேயாக மாறி இந்த வீடியோவை வெளியிட்டது நீதானே என் தம்பி வாழ்க்கையை கெடுக்க பார்த்தது நீதானே என்று ரோகினியை பயத்தில் அலறவிடுகிறார்.

பிறகு என்ன நடக்கிறது? ரோகினி என்ன செய்கிறார்? மீண்டும் அது கனவா? மனோஜ் ரியாக்ஷன் என்ன?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 27-01-25
jothika lakshu

Recent Posts

“நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?” – விமர்சனங்களுக்கு தனுஷின் பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…

22 hours ago

ஜனநாயக கடமையை நிறைவேற்ற சென்னை திரும்பிய அஜித் குமார்

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…

22 hours ago

இந்த வாரம் OTT-யில் ‘ஹேப்பி ராஜ்’ வெளியீடு!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…

22 hours ago

Amarkalam Re-Release Official Trailer

Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas

22 hours ago

Breakfast Trailer

Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…

22 hours ago

கார்த்திக் சுப்புராஜ் – லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ’29’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…

23 hours ago