siragadikka asai serial episode update 18-02-26
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் சத்யா வீட்டுக்கு வந்த சிந்தாமணியின் மகள் வீட்டுக்குள் வந்தவுடன் மீனாவின் அம்மாவிடம் சத்யா எங்கே என்று கேட்கிறார் மேல துணி காய போட்டு கிட்டு இருக்கான் என்று சொல்ல மேலே வந்து சத்யாவிடம் பேசுகிறார். என்ன விஷயம் என்று சத்யா கேட்க உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் நான் கொஞ்ச நாளா சரியா தூங்க மாட்டேங்குற சரியா வேலை செய்ய மாட்டேங்குற என்ன பத்தின நினைப்பு உன் மனசுல என்னவா இருக்கு என்று கேட்க நீங்க நான் வேலை செய்ற ஆபீஸோட ஓனர் என்று சொல்லுகிறார்.
இது மட்டும் இல்லாம என்னோட பிரண்டு என்று சொல்லுகிறார் என் மனசுல அது மட்டும் இல்ல நான் உங்களை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன் என்பதை சொல்ல உடனே சத்தியா நீங்க திடீர்னு இப்படி பேசினா நான் என்ன பண்ண முடியும் ஆனால் என் மனசுல இப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை என்று சொல்ல எதுவா இருந்தாலும் யோசிச்சு சொல்லுங்க சத்யா என்று சொல்ல அவரும் சரியான சம்மதிக்கிறார். மறுபக்கம் முத்து கட்டில் பிரித்து கொண்டிருக்கும் விஜயா பார்த்துவிட்டு கண்டிப்பாக இது நடந்ததுதான் ஆகணுமா என்று அண்ணாமலை கேட்க ஆம் என்று சொல்லுகிறார். அவன் படிச்சவங்க கொசு கடிக்கும் ஏசி இருந்தா எப்படி தூங்குவான் என்று கேட்க இத்தனை நாளாக தூங்க தானே தூங்கிக்கொண்டிருந்தான் உனக்கு அவனை பற்றி அக்கறை இல்லையா என்று கேட்கிறார்.
உடனே மீனா வீட்டுக்கு வர அவரிடம் இவளை கீழே படுத்து கிடந்த என்று சொல்ல அண்ணாமலை நீ திருந்தவே மாட்டியா என்று கேட்கிறார் உடனே மீனா எனக்கு எல்லாம் பழகிடுச்சு மாமா என்று சொல்லி,ரோகினி சந்திக்க விஷயத்தை சொல்ல ஒண்ணா சேர்ந்துட்டீங்களா என்று கோபப்பட முத்து முதல்ல அவளை பேச விடுங்க என்று சொல்லுகிறார். மீனா கிருஷ்க்கு உடம்பு சரியில்லாததையும் நம்ம ரெண்டு பேர் பேரையும் சொல்லிக்கிட்டே இருக்கிறதாகவும் சொல்ல நீங்க ரெண்டு பேர் என்ன கடவுளா உங்க பேரை சொல்லிக் கொண்டிருக்கிறதுக்கு என்று விஜயா கோபப்படுகிறார். நீங்க சொல்லுங்கப்பா இப்ப போய் நாங்க பாக்கட்டுமா வேண்டாமா என்று கேட்க ரோகினி இப்ப இருக்குற நிலைமைல உங்களை வர சொல்றாங்க எதுவும் காரணம் இல்லாமல் இருக்காது ரோகினிக்கு தெரியாம கிரிஷ் தனியா பார்க்க முடியுமான்னு பாருங்க என்று சொல்ல நீ சொல்றதும் சரிதான் பா என்று சொல்லி வருகிறார் உடனே விஜயா உங்களால மனோஜ் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் மீனா என்ன பண்றது என்று கேட்க கிரிஸும் இங்க வர வேண்டாம் நம்மளும் அங்க போக வேண்டாம் அதற்கு ஒரு வழி இருக்கு என்று சொல்லுகிறார் மறுபக்கம் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் நீத்துவை சந்தித்து செக்கை கொடுத்து இதை வாங்கிட்டு உங்க ஊருக்கு ஓடி போய்டு இல்லன்னா அவ்வளவுதான் என்று மிரட்டவழக்கம் போல் நீத்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க அவர்கள் கடுப்பாகி சென்று விடுகின்றனர். பிறகு சிந்தாமணி ரோகினியை வந்து சந்திக்க என்ன பேசுகின்றனர்? என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…