முத்து, மீனா சொன்ன வார்த்தை, ரோகினிக்கு காத்திருந்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

கிருஷ் பாட்டி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியாகியுள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றும் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மாவிற்கு ஃபோன் போட்டு நலம் விசாரிக்கிறார். பிறகு முத்து,மீனா அங்கு வரும் விஷயத்தை சொல்லி, கிரிஷ்ஐ அவங்க கண்ணுல காட்டாத என்று சொல்லுகிறார். எப்படி முடியும் என்று கேட்க பக்கத்து தெருவுல நம்ம சொந்தக்கார வீடு இருக்குது இல்ல அங்க எடுத்துனு போய்விடு. முடிஞ்சா உங்களை இன்னொரு வாட்டி வர வேணாம்னு சொல்லி அனுப்பிவிடு என்று ரோகினி சொல்லுகிறார்.

மறுபக்கம் ரவி பர்ஃபி செய்ய மீனாவும் ஸ்ருதியும் டேஸ்ட் பார்த்து செமையா இருக்கு என்று சொல்லுகின்றனர். ரவி நீங்க கிருஷ் பாக்க போறீங்க இல்ல இதுவும் கொஞ்சம் எடுத்துட்டு போங்க என்று சொல்லுகிறார். உடனே விஜயா வர சுருதி உடனே மாறி உங்களுக்கு ஏன் நாங்க தரணும் என்று மீனா விடம் சண்டை போடுவது போல் பேசுகிறார்.

உடனே விஜயா இப்பதாமா நீ கரெக்டா பேசுற வெக்கிறவங்களை வைக்கிற இடத்துல வைக்கணும் என்று ஸ்ருதியிடம் சொல்கிறார். பிறகு ரவி கடலமிட்டாய் செஞ்சிருக்க டேஸ்ட் பண்ணி பாருங்க என்று சொல்ல சூப்பரா இருக்கு நானும் பார்வதி வீட்டுக்கு தான் போறேன் கொஞ்சம் குடு என்று சொல்ல ரவி பாக்சில் போட்டு கொடுக்கிறார்.

முத்துவும், மீனாவும் க்ரிஷ் வீட்டுக்கு வர, குழந்தை எங்கே என்று கேட்கின்றனர். எனக்கு உடம்பு சரியில்லை என்று சொந்தக்காரங்க வீட்டில் விட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். இப்ப கூட உங்க பொண்ணு வராதா என்று முத்து கோபப்பட, தத்தெடுக்கும் விஷயம் குறித்து கிருஷ் பாட்டியிடம் சொல்லுகின்றனர்.

முத்துவும், மீனாவும் நாங்க நல்லபடியா பார்த்துப்போம் எங்களுக்கு குழந்தை பிறந்தாலும் கிருஷ் எங்களுடைய முதல் குழந்தை என்று எவ்வளவு சொல்லியும் க்ரிஷ் பாட்டி அமைதியாக யோசித்துக் கொண்டே இருக்கிறார்.

முத்து ஏன் யோசிக்கிறீங்க உங்க முடிவை உடனே சொல்லுங்க என்று சொல்ல மீனா அப்படியெல்லாம் சொல்ல முடியாது அவங்க பொறுமையா யோசிச்சு சொல்லட்டும் விடுங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். ரோகினிக்கு போன் போட்ட அம்மா ரோகினி இடம் அவங்க கரெக்டா தான் பேசுறாங்க அவங்க கிருஷ் மேல அக்கறையா இருக்காங்க, அவனுடைய எதிர்காலத்தை பத்தி யோசிக்கிறாங்க என்று சொல்ல, அப்போ நான் அப்படி இல்லையா என்று ரோகினி கோபப்படுகிறார்.

ரோகினியின் அம்மா எடுத்த முடிவு என்ன? ரோகினி என்ன சொல்லப் போகிறார் என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


Siragadikka Aasai Serial Today Episode Update
jothika lakshu

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

1 day ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

1 day ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

1 day ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

1 day ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

1 day ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

1 day ago