தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து விஜயா வளையலை தூக்கி வீசியதால் கோபப்பட விஜயா என்னடா பண்ணுவ தலையை எடுத்துடுவியா என்று கேட்கிறார். உன் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்கிறார். அண்ணாமலை இதுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்க சொல்ல விஜயா முடியாது என ரூமுக்குள் செல்கிறார்.
இதனால் மீனா கலங்கி நிற்க முத்து அவங்க வெளியவே வர ஏதாவது பண்ணுங்கன்னு சொன்னல.. உன்னை வச்சு பண்ணிட்டாங்க போதுமா என்று கேட்கிறார்.
அடுத்ததாக ரோகினி ஆண்ட்டியை போய் மீனா கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னா எப்படி கேட்பாங்க என்று சொல்ல எல்லாத்துக்கும் காரணம் மனோஜ் தான்.. அன்னைக்கே உண்மையை சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என சொல்கிறார் ரவி.
முத்து நகைக்கான 4 லட்சம் ரூபாய் பணம் எனக்கு வேண்டும் என்று சொல்ல மனோஜ் என்கிட்ட இப்போ அவ்வளவு பணம் எல்லா இல்லை என்று சொல்ல ரோகினி வளையலை ஆண்ட்டி கிட்டயே கொடுத்துடுறேன் என்று சொல்கிறார். ஸ்ருதி அப்போ இவங்களோட பணம் என்று கேட்க அதை நாங்க கொடுத்துடுறோம். கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க என்று சொல்ல முத்து உன்னை நம்பி டைம் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.
அடுத்ததாக ரோகிணி வளையலை கொண்டு வந்து கொடுக்க இதை எதுக்கு எடுத்துட்டு வந்த? அவ கிட்டயே கொடுக்க வேண்டியது தானே என்று சொல்ல ரோகிணி தப்பு பண்ணது மனோஜ்.. அதை அவன் தான் சரி செய்யணும், பணத்தை நாங்க கொடுத்துக்கிறோம் என்று சொல்கிறார்.
அடுத்து மனோஜ் மன்னிப்பு கேட்க உன்னால நடுத்தெருவில் தான் நிக்கணும் போல என்று சொல்ல நான் இருக்கும் போது ஏன் மா இப்படி பேசுறீங்க என்று கேட்க நீ இருக்கிறது தான் அவளோட பயமே என்று பார்வதி பதிலடி கொடுக்கிறார்.
பிறகு மனசு கஷ்டமாக இருப்பதாக பார்வதியும் விஜயாவும் கோவிலுக்கு வருகின்றனர். அப்போது பார்வதி அண்ணன் நீ மன்னிப்பு கேட்டா தான் பேசுவேனு சொன்னா என்ன பண்ணுவ என்று கேட்க அப்படினா அவர் பேசவே வேண்டாம் என்று சொல்கிறார். சுதா கோவிலுக்கு வர வெறும் கையாக இருப்பதை பார்த்து வீட்ல ஏதாவது பிரச்சனையா?என கேட்க இல்லை என சமாளிக்கிறார்.
அண்ணாமலை முத்து, மீனாவிடம் விஜயாவுக்காக மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா,கழுகு…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்துவின்…
இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…