siragadikkaaasai serial episode update 24-02-26
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பூஜைக்கான ஏற்பாடுகளை மீனா வீட்டில் செய்து கொண்டிருக்க அண்ணாமலை என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் அதுதானா பூஜைக்கு ஏற்படுத்தியிருக்கேன்னு சொல்லி இருக்காங்க இன்னைக்கு சாமியார் அம்மா வராங்க அவங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களா அவங்க சொன்னா எல்லாமே நடக்கும்னு சொல்றாங்க அதனால தான் என்று சொன்ன இதெல்லாம் எதுக்கு நல்லது நினைச்சா கண்டிப்பா நம்மளுக்கு நல்லது நடக்கும் என்று சொன்ன நம்ம வீட்ல ஏற்கனவே நிறைய பிரச்சனை இருக்கு அதுல தீர்த்து வைக்க தான் இன்னைக்கு வர சொல்லி இருக்கேன் என்று விஜயா சொல்லி இருக்கிறார்.
உடனே முத்துவும் இது எல்லாம் ஏமாத்துற வேலைப்பா இதெல்லாம் நம்பனும்னு அவசியமே கிடையாது என்று சொல்ல நீங்க அமைதியா இருங்க கண்டிப்பா அவங்க வந்தா உங்க குடும்பத்துல இருக்குற பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லுவாங்க என்று விஜயா சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் அவர்கள் வந்துவிட, விஜயா அவர்களை வரவேற்று உட்கார வைக்கிறார். உடனே அண்ணாமலை சரி நீங்க பாருங்க நான் கிளம்புறேன் என்று சொல்ல அந்த பெண்மணி யாரும் வீட்ல இருந்து வெளியே போகக்கூடாது ஒன்னு நான் வரதுக்கு முன்னாடியே போய் இருக்கணும் நான் வந்ததுக்கப்புறம் போக கூடாது என்று சொல்லி தடுத்து நிறுத்தி வைக்கிறார் பிறகு தீவாரதனை செய்த உடனே சாமி வந்தது போல செய்த அந்த பெண்மணி விஜயாவை கூப்பிட்டு உன் பெரிய பையனுக்கு முதல் தடவை பார்த்த பொண்ணுதான் இரண்டாவது பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க என்று சொல்லுகிறார்.
இது மட்டும் இல்லாமல் இப்போ உன் பையனோட பொண்டாட்டி ஏமாத்திட்டு போயிருக்கா என்று சொல்ல விஜயா நம்பி விடுகிறார். இதுக்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்க உன்னோட இரண்டாவது மருமக இந்த வீட்ல இருக்கக்கூடாது அவை இருந்தா இந்த குடும்பத்துக்கு ஒரு பெரிய ஆபத்து வரும் என்று சொல்ல மீனா அதிர்ச்சியடைந்து கண் கலங்குகிறார். என்ன சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க அந்த நேரம் பார்த்து விஜயாவை கூப்பிடும்போது குங்குமம் தவறிக்கு கொட்டி விடுகிறது இதனால் அந்த பெண்மணி உன்னோட இரண்டாவது மருமக இந்த வீட்ல இருந்தா உன்னோட தாலிக்கு ஆபத்து அவளை இந்த வீட்ல இருந்து வெளியே அனுப்பிவிடு என்று சொல்லிவிட மீனா அழுகிறார். விஜயா குங்குமம் தவறியதை பார்த்து உடைந்து போய் உட்கார்ந்து விட முத்து இப்ப நீ வீட்டை விட்டு எழுந்து போறியா இல்லையா என்று மிரட்டுகிறார் உடனே சாமி வந்தது போல முத்துவை பார்க்கும் முறைக்க இதை எல்லாம் யார் கிட்ட வச்சுக்காத என்று குத்து விளக்கை எடுத்து அந்த என் மனைவியை மிரட்ட அவர் அலறி அடித்து ஓடி விடுகிறார் உடனே சிந்தாமணியிடம் வந்து பேசுகிறார்.
நீங்க சொன்ன மாதிரியே எல்லாத்தையும் சொல்லிட்ட ஆனா அங்க ஒரு ரவுடி இருப்பானு நீங்க சொல்லவே இல்லையே கொஞ்ச இல்லனா என்னால குத்தி கொன்னு இருப்பான் என்று சொல்லுகிறார் சரி நான் சொன்னதெல்லாம் சொல்லிட்டியா என்று சொல்ல நடந்த விஷயத்தை சொல்லுகிறார் அந்த விஜயா நம்பிட்டா ஆனா இருக்குறவங்க யாரும் நம்பின மாதிரி தெரியல என்று சொல்ல அதுக்கு இன்னொரு சம்பவம் பண்ணா நம்பிடுவாங்க என்று சொல்லிவிட்டு நான் அதை அப்புறம் சொல்றேன்னு சொல்லி அவனுக்கு பணத்தை கொடுத்து சிந்தாமணி அனுப்பி வைக்கிறார். அப்புறம் தான் இது முழுக்க முழுக்க சிந்தாமணியின் திட்டம் என தெரிய வருகிறது. மறுபக்கம் வீட்டில் விஜயா சோகமாகவே இருக்க மீனா தண்ணீர் கொடுக்கிறார் அப்போதும் வேணாம் இது கோபப்பட்டுக் கொண்டே இருக்க வீட்டில் இருப்பவர்கள் என்ன சொல்லுகின்றனர்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? அண்ணாமலை என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
[Best_Wordpress_Gallery id="1047" gal_title="Blast Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1043" gal_title="Fahadh Faasil and C Prem Kumar New Movie Launch"]
[Best_Wordpress_Gallery id="1041" gal_title="Poo Kaai Kani Movie Pooja Stills"]
[Best_Wordpress_Gallery id="1039" gal_title="Athiradi Movie Pre Release Event"]
[Best_Wordpress_Gallery id="1037" gal_title="Sattendru Maarudhu Vaanilai Pre-Release Event"]