shocking news about ponniyin selvan1 movie update
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று அனைத்து திரையரங்குகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மாபெரும் பொருட்சளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று படம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 5 திரையரங்குகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே 5 திரையரங்குகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு படம் பார்ப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியான தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…