சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..!

சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..!

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை வழங்கிய சீமான் ‘இந்த தலைமுறை படைப்பாளர்களின் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் என் தம்பி.

அவர் கையாளுகின்ற விஷயங்கள் ரொம்ப கனமானது, சாதாரண ஒருவர் என்றால் ரொம்பவும் தடுமாறி விடுவார்கள். ஆனால், நேர்த்தியாய் பிரச்சினைக்குரிய விஷயங்களை பிரச்சினை இல்லாமல் தொடுவதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும். அது இந்த இளவயதில் அவரிடம் இருப்பது வியப்பாக இருக்கும்.

இரண்டாவது எங்கள் மண்சார்ந்த கதைகளை மிகை இல்லாமல், இயல்பாக அந்த வாழ்வியலோடு மக்களை கொண்டு போய் சேர்ப்பது ரொம்ப கடினம். அவர் எடுத்த பைசனும் பரியேறும் பெருமாளும் இரு புறமும் கத்தியை வைத்து நடக்கும் ஒரு கதைக்களம். அதை மாரியை தவிர வேறு யாரும் அவ்வளவு நேர்த்தியாக கொடுக்க முடியாது.

இதில் எனக்கு எப்போதும் அவரை தூர நின்று பார்த்தாலும், அருகில் நின்று பார்த்தாலும் வியப்பு தான்’ என்று பேசினார்.

விருது பெற்றுக் கொண்ட மாரி செல்வராஜ் ‘நான் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் இருந்தே அண்ணனுடைய பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். அவருடைய கதை சொல்லல் எனக்கு பிடிக்கும். அண்ணன் தன்னுடைய ஆஃபிஸில் வெங்காயம் உரித்துக் கொண்டே, கறி வெட்டிக் கொண்டே கதை சொல்வார் என்பதை எல்லாம் அறிந்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். அவர் எப்படி கதை சொன்னார் என பல உதவி இயக்குநர்கள் `வாழ்த்துகள்’ கதை, `தம்பி’ கதை எல்லாம் எங்களிடம் சொல்வார்கள்.

மழைபெய்யும் காட்சியை சொன்னால், நம் மனதில் மழை பெய்யும் என சொல்வார்கள். அப்போதே அவர் என்றால் எனக்கு வியப்பு தான். என்னுடைய படத்தை பார்க்கவில்லை என்றாலும் எப்போது பார்ப்பேன் என்பதையும் கூறுவார். பார்த்துவிட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் சரி போன் செய்து பாராட்டக்கூடிய அன்பான அண்ணன் சீமான்’ என கூறியுள்ளார்.

Seeman’s opinion on Mariselvaraj’s films..!
dinesh kumar

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

19 hours ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

23 hours ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

24 hours ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

1 day ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

1 day ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

1 day ago