RJ Balaji shared interesting information about karuppu
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுங்கள். இந்த படத்தில் திரிஷா,இந்திரன், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிக்கா, யோகி பாபு, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரான ஆர்.ஜே பாலாஜி இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் அதாவது சூர்யா சாரை விட அவரது ரசிகர்கள் அவரிடம் விரும்பும் அனைத்தையுமே நான் சேர்க்க விரும்பினேன் என்று கூறிய அவர் அது புதிதாகவும் சவாலாகவும் இருந்தது என்று தெரிவித்துள்ளார் ஆனால் நான் அதை முழுவதும் நம்பிக்கையுடன் ரசித்தேன். நான் முத்து படையப்பா பாட்ஷா போன்ற படங்களை பார்த்து வளர்ந்தேன் வலுவான தொடக்கங்களும் வேடிக்கையான இடைவெளி சண்டைகளும் சக்தி வாய்ந்த உச்ச கட்டங்களுடனும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய கதாநாயகன் படத்திற்கு என் கதாநாயகன் நடனம் ஆட வேண்டும் சிரிக்க வேண்டும் நகைச்சுவை செய்ய வேண்டும் சண்டையிட வேண்டும் வில்லனின் சவால்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என விரும்பினேன். இவை அனைத்தும் ஒரு வலுவான கதையில் இணைப்பது எளிதாக இருந்த போதிலும் அதை செயல்படுத்துவது கடினமாக இருந்தது ஆனால் சூர்யா போன்ற ஒரு நடிகர் ஆளுமை மற்றும் திறமையுடன் இருப்பதால் அது எளிதாக இருந்தது என்று தெரிவித்து உள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…
Nova – Phase 1: The Arrival - Trailer | Raiza Wilson | Dhurva | Sendrayan…
Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…
கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…