தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது மேலும் திரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிகா, சுப்ரித்தா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட குழுவினர் அமைதி காத்துவந்தனர். இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட இந்த படத்தின் இயக்குனரான ஆர் ஜே பாலாஜி இந்த படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.
அதாவது இந்த திரைப்படம் எலக்சன் முடிந்த பிறகு சம்மரில் வெளியாகும் எனக் கூறியுள்ளார். கண்டிப்பா இந்த திரைப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல ஃபேமிலி என்டர்டைனர் திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இவர் கொடுத்த அப்டேட் இணையத்தில் வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


