Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகாமியை அசிங்கப்படுத்திய சரவணன்.. சிவகாமி எடுத்த சபதம்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு

rajarani2 serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் சிவகாமி சரவணன் சந்தியாவை அழைத்து கேஸை வாபஸ் வாங்க வேண்டும் என சொல்ல சரவணன் முடியாது என வெளிப்படையாக கூறுகிறார். அந்த சாமியார பகைச்சிக்கிறது தப்பு இல்லையா உன் பொண்டாட்டி பேச்சை கேட்டு கேட்டு இப்படி பண்ணாத என எவ்வளவு சொல்லியும் சரவணன் இதில் உறுதியாக இருக்க சிவகாமி கோபித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.

அதன் பிறகு சரவணன் சந்தியாவிடம் எல்லோரும் தப்பா பேசினால் பேசட்டும் ஆனா உங்க மேல வீண் பழி போடுறது தான் என்னால பொறுத்துக்க முடியல என கூறுகிறார். சாமியரோட முகத்திலேயே கிழித்தே ஆக வேண்டும் என கூறுகிறார். அதன் பிறகு சாமியார் ஊருக்கு வர எல்லோரும் அவரை சூழ்ந்து கொள்கின்றனர்.

சரவணன் சந்தியாவை பார்த்து உங்களுக்கு கடைசியாக அந்த அகிலாண்டேஸ்வரி ஒரு வாய்ப்பு தருகிறார் என கேட்க சரவணன் முடியாது என கூறுகிறார். நீங்க அந்த கடவுளையே பகைச்சுக்கறீங்க அதுக்கான பலனை கண்டிப்பா அனுபவிப்பீங்க, நீங்க மட்டும் இல்ல உங்க குடும்பமே அனுபவிக்கும் நாசமா போகும் என சாபம் விட சிவகாமி வாடா சரவணா கேஸ் வாபஸ் வாங்கலாம் என கூப்பிட சரவணன் முடியாது என்று கூறி விடுகிறார்.

பிறகு சிவகாமி அங்கிருந்து சரவணன் என்ன அசிங்கப்படுத்திட்டான் என புலம்பி கொண்டு வீட்டுக்கு வர அர்ச்சனா வேற அவரை ஏற்றி விட சரவணன் மாறமாட்டான் என் செந்தில் சொல்ல அவனை நான் மாத்தி காமிக்கிறேன் நானா அந்த சந்தியாவானு பார்க்கலாம் என சபதம் எடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani2 serial episode update
rajarani2 serial episode update