Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவிற்கு காத்திருக்கும் அடுத்த பிரச்சனை..சரவணன் எடுத்த முடிவு..இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் தேர்தலில் தன்னை தலைவராக நிற்க சொல்வதாக சொல்ல இதைக் கேட்டு வேண்டாம், நமக்கு எதுக்கு வேண்டாத வேலை என சொல்ல பிறகு ரவி சரவணன் தலைவர் ஆனால் அவனுக்கும் ஒரு மரியாதை இருக்கும் என சொல்லி சிவகாமிக்கு புரிய வைக்க பிறகு சரி என ஒப்புக்கொள்கிறார்.

இந்த பக்கம் சந்தியா அப்துல் ஜோதி என எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அங்கு வரும் ஸ்வேதா என்ற பெண் யார் அழகு என பேச்சை ஆரம்பிக்க ஜோதி சந்தியா தான் என சொல்ல இதனால் ஸ்வேதா கோபப்படுகிறார். சந்தியாவின் மீது வெறுப்பு உண்டாகிறது. இதனால் வரும் நாட்களில் சந்தியாவுக்கு உருவாகும் எதிரியாக ஸ்வேதா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறகு செந்தில் தன்னுடைய நண்பர்களுடன் ஒயின்ஷாப் ஒன்றிற்கு செல்ல அப்போது அங்கு சரக்கடித்துக் கொண்டிருக்கும் பரந்தாமன் சரவணன் எப்படி தோற்கடிப்பது என யோசித்துக் கொண்டிருக்க அப்போது செந்திலை பார்த்தும் சரவணனுக்கு எதிராக செந்திலை களத்தில் இருக்கலாம் என திட்டம் போடுகிறார்.

அடுத்து சரவணன் சந்தியாவுக்கு போன் போட்டு தலைவர் போட்டியில் நிற்கப் போவதாக சொல்ல சந்தியா சூப்பர் என கூறுகிறார். இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அப்போது சிவகாமி வந்து சரவணனை ஃபோனை வைக்க சொல்லி இரவு நேரத்தில் சந்தியாவிடம் இவ்வளவு நேரம் பேசினால் அவள் எப்படி பயிற்சியில் கவனம் செலுத்துவா என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update
raja rani 2 serial episode update