பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு வரும் இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததாக நேற்று தகவல் வெளியானது.
இவரது instagram பக்கத்திலேயே இந்த பதிவு வெளியானது. இதையடுத்து பலரும் பூனம் பாண்டே மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். இப்படியான நிலையில் தற்போது நான் இறக்கவில்லை. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே அப்படி ஒரு பதிவை வெளியிட்டேன்.
அந்த பதிவு புற்றுநோயை பற்றி உங்கள் எல்லோரையும் பேச வைத்துள்ளது. என்னுடைய முயற்சி வெற்றி பெற்று விட்டது என தெரிவித்துள்ளார். மேலும் யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
View this post on Instagram

