தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் விவேக் சூர்யாவிடம் உன்னோட கல்யாணத்தை லீகலா சேஃப்டி பண்ணிக்கோ என்று சொல்ல சூர்யா என்ன சொல்ற என்று கேட்டு ரிஜிஸ்டர் பண்ணிக்கோ என்று சொல்லுகிறார். மறுபக்கம் அருணாச்சலம் சூர்யா உயிர்க்கு ஆபத்துன்னு சொல்றேன் இப்படி பேசிகிட்டு இருக்க என்று கேட்க சூர்யாவோட உயிரை எப்படி காப்பாத்தணும்னு எனக்கு தெரியும் என்று சுந்தரவல்லி கோபமாக சொல்லுகிறார்.
மறுபக்கம் நந்தினி சூர்யாவிடம் வந்து நீங்களும் ஐயாவும் சொன்னது வச்சு இந்த வீட்ல இருக்க நான் சம்மதிச்சேன் ஆனா நான் இந்த வீட்ல இருந்து போறத பத்தி யாரும் எதுவும் பேச மாட்டேங்கிறீங்க என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
