moondru mudichu serial promo update 10-01-26
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் உட்கார்ந்து இருக்க சுந்தரவல்லி வந்து 48 நாள் விரதம் இல்லாம அவங்க பாட்டு மூணு நாளா கிளம்பிட்டாங்க என்று சொல்ல அவன் திடீர்னு வந்து கிளம்பிட்டாங்க என்று சொல்ல டிவியில் பழனியில் கூட்டம் அதிகமாக இருக்கு என்று சொல்ல, உடனே அருணாச்சலம் சூர்யாவுக்கு போன் போட கூட்டம் இருந்தது டாடி ஆனா ஸ்பெஷல் தரிசனம் உங்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம் என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் மூவரும் வீட்டுக்கு வர அருணாச்சலம் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கிறார். முதல்ல பிரஷ் அ பாக்கணும் என்று சூர்யா சொல்ல முதல்ல பூஜை ரூமுக்கு போகலாம் என்று அழைத்து வருகிறார். சாமி கும்பிட்டு விட்டு மாலையை கழட்டி இந்த பாலில் போடுங்க என்று சொல்லி கல்யாணம் கொடுக்க சூர்யாவும் நந்தினியும் செய்கின்றனர். மறுநாள் காலையில் சூர்யா தூங்கிக் கொண்டிருக்க நந்தினி கிச்சனில் வழக்கம் போல் வேலையே ஆரம்பிக்கிறார். கல்யாணம் வந்தவுடன் அவரை சாமி என சொல்ல அப்படி எல்லாம் சொல்லாதம்மா என்று சொல்ல இருவரும் பேசிக் கொண்டிருக்க அசோகன் வந்து வாடா போடா என கல்யாணத்தை கூப்பிட உன்ன போய் சாமின்னு சொல்ல வச்சுட்டியே என்று திட்டிவிட்டு காபி போட்டு கொடுடா என்று சொல்ல சரிடா என கல்யாணம் சொல்லுகிறார்.
சரிடா என்றுசொன்னியே என்று கேட்க நான் போய் அப்படி சொல்லுவனா என்று கல்யாணம் சமாளித்து அனுப்பி விடுகிறார் நந்தினி காபி போட்டு எடுத்து வந்து சூர்யாவை எழுப்பி கொடுக்கிறார். நீங்க மலைக்கு போனதுக்கு உங்க அம்மாகு தான் நன்றி சொல்லணும், எனக்கும் அவங்களுக்கும் சண்டை வருவதெல்லாம் சாதாரணம் தான். ஆனா மலைக்கு போனதுக்கு நீ தான் காரணம் என்று சொல்லி நன்றி சொல்லுகிறார். மனசு ரொம்ப அமைதியா இருக்கு மனசு ரொம்ப லேசான ஃபீலிங்ல இருக்கு ரொம்ப சூப்பரா இருந்துச்சு என்று சொல்ல, சரி விடுங்க வருஷம் தவறாம நாம போட்டு விடலாம் என்று சொல்ல கண்டிப்பா போடுவோம் நந்தினி என சூர்யா சென்று விடுகிறார். மாதவியும் சுரேகாவும் பேசிக்கொண்டே இருக்க அசோகன் வருகிறார்.
அந்தக் கல்யாணத்தை சாமின்னு சாமி என்று கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணாங்க இந்தக் கல்யாணம் என்கிட்ட மாட்டிட்டான் என் மனசுல இருந்தா ஆத்திரத்தை எல்லாம் கொட்டி விட்டேன் என்று சொல்லுகிறார். இதெல்லாம் உங்களுக்கு ஒரு பெருமையா நீங்க டம்மி பீஸ் கல்யாணத்த மிரட்டிட்டு ஓவரா பண்ணிக்கிட்டு இருக்காதீங்க தைரியம் இருந்தா சூர்யா எதிர்ல உன்னால பண்ண முடியுமா என்று கேட்க சுரேகா மாமாவாவது முடிஞ்ச அளவுக்கு பண்ணி இருக்காரு நீ என்ன பண்ண என்று கேட்க, சூர்யா மற்றும் வெளியே போகட்டும் அவளுக்கு இருக்கு என்று சொல்ல சுரேகா சந்தோஷப்படுகிறார். மறுபக்கம் சூர்யா பாத்ரூமில் யார் வென்னீர் போட்டது என்று கேட்க நான்தான் போட்டேன் நீங்க போய் குளிங்க என்று சொல்ல இனிமே எனக்கு வெந்நீர் வேண்டாம். நான் பச்ச தண்ணில தான் குளிக்க போகிறேன் என்று சொல்லுகிறார்.
நீங்க இப்ப பச்ச தண்ணில குளிக்க வேண்டாம், வெண்ணீரிலேயே குளிங்க இது மார்கழி மாசம் ரொம்ப குளிரும் உடம்புக்கு ஒத்துக்காது என்று சொல்ல, அப்படியே குளிரினாலும் நான் என்ன பண்ணப் போறேன் தெரியுமா என்று நந்தினி காதோரத்தில் வந்து நந்தினி உன் பேரை தான் சொல்லுவேன் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் தீபாவளி பொங்கல் மாலை போடுவது இது மாதிரி ஏதாவது ஒன்னு வந்துட்டாவே நீ இன்னும் வேலை செய்ய ஆரம்பிச்ச என்று சொல்ல எங்க அம்மா ரெண்டு மணிக்கு மூணு மணிக்கு எல்லாம் எழுந்து வேலை பண்ணுவாங்க பொங்கலுக்கு அதே மாதிரி விடியர்துக்குள பொங்கல் வைப்போம் என்று சொல்லுகிறார்.அது தான் நீ எல்லாம் வேலை கட கடனு செய்ற என்று சொல்ல,பிறகு நந்தினி பொங்கல் கொண்டாடுவதன் அவசியம் பற்றி சூர்யாவிடம் சொல்லுகிறார்.என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…