moondru mudichu serial promo update 09-01-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு சுந்தரவல்லி பாத பூஜை செய்துவிட்டு சென்றுவிட சாமியார் நந்தினிக்கும் செய்ய சொல்லுகிறார். சுந்தரவல்லி செய்ய விடாமல் உடனே மாதவி நான் பண்றேன்னு வந்து சூர்யாவுக்கும் நந்தினிக்கும் பாத பூஜை செய்கிறார். உடனே அசோகன் சுரேகா என இருவரும் வைத்து முடிக்க பிறகு அனைவரையும் உட்கார வைத்து சாப்பாடு போடுகின்றனர். அனைவரும் சாப்பிட்ட பிறகு சாமியார் சூர்யாவை புகழ்ந்து அருணாச்சலத்திடம் பேசுகிறார். உடனே பிச்சைக்காரர்களில் ஒருவர் எங்களையெல்லாம் மனுஷனா கூட யாரும் மதிக்க மாட்டாங்க ஆனா இவ்வளவு பெரிய பங்களா குள்ள கூட்டிட்டு வந்து விதவிதமா சாப்பாடு போட்டு இருக்கீங்க நீங்களும் உங்க குடும்பமும் நூறு வருஷத்துக்கு தாண்டி சந்தோஷமா இருக்கணும் என்று வாழ்த்தி விட்டு அனைவரும் செல்கின்றனர்.
வீட்டுக்குள் வந்த மாதவி சுரேகா அசோகன் மூவரும் நந்தினிக்கு பாத பூஜை செய்தது குறித்து எரிச்சலாக இருந்ததாக பேசிக்கொள்கின்றனர். இது எல்லாமே அவளோட திட்டம் தான் என்று சுரேகா சொல்லுகிறார். மாதவி நாங்க மட்டும் பேசிக்கிட்டு இருக்கும் நீங்க அமைதியா இருக்கீங்க என்று கேட்க கொஞ்ச நேரம் பேசாம அமைதியா இருங்க என்று சத்தம் போடுகிறார். மறுபக்கம் அருணாச்சலம் கண் கலங்கி கொண்டு இருக்க சூர்யாவும் நந்தினியும் வருகின்றனர். என்னாச்சு டாடி என்று கேட்க உன்ன நெனச்சி எனக்கு ஆனந்த கண்ணீர் என்று சொல்லுகிறார். யாருன்னு தெரியாதவங்க எல்லாம் வந்து தங்கமான புள்ளைய பெத்து இருக்கீங்க ன்னு சொல்லும்போது மனசெல்லாம் பூறிச்சு போச்சு இதுக்காக நான் எவ்வளவு நாளா ஏங்கிட்டு இருந்தேன் தெரியுமா என்று கேட்கிறார்.
இந்த சாதாரண விஷயத்துக்காக எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க என்று கேட்க, நான் பணம் புகழால் சம்பாதிக்காத சந்தோஷத்த அந்த வார்த்தை எனக்கு கொடுத்திருக்கு. உனக்கு இப்ப புரியாது நீ அப்பா வாழும்போது புரியும் என்று சொல்லி விடுகிறார் சரிங்க டாடி நாங்க நாளைக்கா பழனி போலாம்னு முடிவு எடுத்திருக்கும் பொங்கல்லாம் வருதில்ல அடுத்த வருஷம் வேணா பொறுமையா 48 நாள் விரதம் பாலோ பண்ணிக்கலாம் என்று நந்தினி சொன்னதாக சொல்லுகிறார். சரி காலையில பார்க்கலாம் என்று சொல்ல நீங்க அசந்து தூங்குவீங்க நாங்க கிளம்புகிறோம் என்று சொல்ல உங்கள வழி அனுப்புறத விட எனக்கென்ன தூக்கம் நீங்க போய் படுங்க என்று சொல்லி அனுப்புகிறார். உடனே விடியற்காலையில் நந்தினி கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய கல்யாணம் பூஜை செய்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுகிறேன் என்று சொல்லுகிறார்.
உடனே கல்யாணம் வந்து என்னை எழுப்பிருக்கலாமே என்று சொல்ல, கல்யாணத்துடன் நீங்க பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வாங்க என்று சொல்லுகிறார். பிறகு கல்யாணம் தீபாரதனை செய்து பூஜையை முடிக்கிறார். பூஜை முடிந்து மூவரும் கிளம்ப அருணாச்சலம் அவரை வழி அனுப்புகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நான் பாட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன் என்னட பதிலே சொல்லாம நின்னுக்கிட்டு இருக்க கல்யாணம் என்று கேட்க பதிலுக்கு அசோகனை பார்த்து கல்யாணம் என்னடா என கேட்கிறார். சுரேகா மாதவி இடம் அவளை இப்போ என்ன பண்ண போற என்று கேட்க, சூர்யா மட்டும் வெளியே போகட்டும் அவளுக்கு இருக்கு என்று சொல்லுகிறார். மார்கழி மாசத்தில் ரொம்ப குளிரும் என்று சொல்ல எனக்கு குளிர நா நந்தினி நந்தினி உன் பேர தான் சொல்லுவேன் என நந்தினி காதில் வந்து சூர்யா சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…
இந்தியாவின் ரா (RAW) உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாத்து…
SINGHA Official Teaser | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran | Adithya Kathir
Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…